தமிழ்நாட்டில் உள்ள புராதன கோயில்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இன்று (நவ.04) நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் பாதுகாப்புத் துறை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது திருச்செங்கோடு அறநிலையத்துறை உதவி ஆணையர் சரவணன், திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார், நகர துப்புரவு ஆய்வாளர் ஜான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ராமநாதசுவாமி சுவாமி கோயிலில் நகைகளின் எடை குறைவு - குருக்களுக்கு ரூ.12 லட்சம் வரை அபராதம்