ETV Bharat / state

ரூ. 75 லட்சம் பண மோசடி புகார்; முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு!

author img

By

Published : Oct 28, 2021, 11:35 AM IST

சத்துணவு அமைப்பில் வேலை வாங்கி தருவதாக 15 பேரிடம் ரூ. 75 லட்சம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரூ. 75 லட்சம் பண மோசடி புகார்; முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு!
ரூ. 75 லட்சம் பண மோசடி புகார்; முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு!

நாமக்கல்: நாமக்கல்லின் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குணசீலன். இவர் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் சரோஜாவின் நெருங்கிய உறவினர் ஆவார். இந்நிலையில் கடந்த மாதம் குணசீலன், அவரது மனைவி கலாநிதி ஆகியோர் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்தனர்.

அதில், “சரோஜா அமைச்சராக இருந்த போது புதிய வீடு கட்டுவதற்க்கு பணம் தேவைப்படுவதாக கூறினார். ஆகையால் பணம் தருவோருக்கு சத்துணவு வேலை வாங்கி கொடுத்துவிடலாம் எனவும் கூறினார். அதன்படி 15 பேரிடம் ரூ. 75 லட்சத்தை வசூல் செய்து, முன்னாள் அமைச்சர் சரோஜாவிடம் கொடுத்தேன்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கவே, சரோஜாவிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். அதற்கு அவரிடம் பணம் கொடுத்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. மீறி பணம் கேட்டால் கொன்று விடுவதாக அமைச்சர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் சரோஜா மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: கோமாளிகளே 'இல்லம் தேடி கல்வி' திட்டம்தான் திராவிடம் - ஸ்டாலின் அதிரடி

நாமக்கல்: நாமக்கல்லின் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குணசீலன். இவர் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் சரோஜாவின் நெருங்கிய உறவினர் ஆவார். இந்நிலையில் கடந்த மாதம் குணசீலன், அவரது மனைவி கலாநிதி ஆகியோர் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்தனர்.

அதில், “சரோஜா அமைச்சராக இருந்த போது புதிய வீடு கட்டுவதற்க்கு பணம் தேவைப்படுவதாக கூறினார். ஆகையால் பணம் தருவோருக்கு சத்துணவு வேலை வாங்கி கொடுத்துவிடலாம் எனவும் கூறினார். அதன்படி 15 பேரிடம் ரூ. 75 லட்சத்தை வசூல் செய்து, முன்னாள் அமைச்சர் சரோஜாவிடம் கொடுத்தேன்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கவே, சரோஜாவிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். அதற்கு அவரிடம் பணம் கொடுத்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. மீறி பணம் கேட்டால் கொன்று விடுவதாக அமைச்சர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் சரோஜா மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: கோமாளிகளே 'இல்லம் தேடி கல்வி' திட்டம்தான் திராவிடம் - ஸ்டாலின் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.