ETV Bharat / state

நிலத்தகராறு: நாமக்கல்லில் தம்பியைக் கொன்ற அண்ணன்! - namakklal news

நாமக்கல்: நிலத்தகராறு காரணமாக தம்பியை அண்ணன் அடித்தே கொன்றுள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

நாமக்கல்
நிலத்தகராறு தொடர்பாக தம்பியை கொலை செய்த அண்ணன்
author img

By

Published : Mar 25, 2021, 6:58 PM IST

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த கல்யாணியைச் சேர்ந்தவர்கள் பழனிவேல், அண்ணாதுரை. சகோதரர்களான இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக நிலப் பிரச்சினை தொடர்பாகத் தகராறு இருந்துவந்துள்ளது.

இந்நிலையில் அண்ணாதுரையின் குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்றுவிட்ட நிலையில், அவர் மட்டும் வீட்டில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையறிந்து அங்கு வந்த பழனிவேல் உள்ளிட்ட சிலர், அண்ணாதுரையை அடித்து கொலை செய்துவிட்டு, தன்னை தம்பி அடித்துவிட்டதாக உறவினர்களுக்கு கைப்பேசி மூலம் தெரிவித்துவிட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்ந்துள்ளார்.

இதனையடுத்து அண்ணாதுரையின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபொழுது, அவர் வீட்டிற்கு அருகேயுள்ள வயலில் படுகாயங்களுடன், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுசத்திரம் காவல் துறையினர், அண்ணாதுரையின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். பின் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பழனிவேல், அவரது மனைவி பழனியம்மாள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: நாமக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த கல்யாணியைச் சேர்ந்தவர்கள் பழனிவேல், அண்ணாதுரை. சகோதரர்களான இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக நிலப் பிரச்சினை தொடர்பாகத் தகராறு இருந்துவந்துள்ளது.

இந்நிலையில் அண்ணாதுரையின் குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்றுவிட்ட நிலையில், அவர் மட்டும் வீட்டில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையறிந்து அங்கு வந்த பழனிவேல் உள்ளிட்ட சிலர், அண்ணாதுரையை அடித்து கொலை செய்துவிட்டு, தன்னை தம்பி அடித்துவிட்டதாக உறவினர்களுக்கு கைப்பேசி மூலம் தெரிவித்துவிட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்ந்துள்ளார்.

இதனையடுத்து அண்ணாதுரையின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபொழுது, அவர் வீட்டிற்கு அருகேயுள்ள வயலில் படுகாயங்களுடன், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுசத்திரம் காவல் துறையினர், அண்ணாதுரையின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். பின் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பழனிவேல், அவரது மனைவி பழனியம்மாள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: நாமக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.