ETV Bharat / state

சுரங்கம் அமைக்கும் பணியினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

author img

By

Published : Oct 3, 2020, 3:59 PM IST

நாமக்கல்: கொல்லிமலையில் ரூ.338.79 கோடி மதிப்பீட்டிலான 20 மெகா வாட் நீர்மின் திட்டத்தில் நடைபெற்றுவரும் சுரங்கம் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் ஆய்வுசெய்தார்.

சுரங்கம் அமைக்கும் பணியினை ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியர்
சுரங்கம் அமைக்கும் பணியினை ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியர்

கொல்லிமலை மலைவாழ் மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அய்யாறு நீரை கொண்டு 338 கோடி ரூபாய் மதிப்பில் 20 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் திட்டம் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதன்கீழ் வளப்பூர் நாடு கிராம பகுதிகளில் அய்யாறு ஆற்றின் கிளை ஓடைகளின் குறுக்கே அச்சங்காடுபட்டி, கோவிலூர், தெளியங்கூடு, இருங்குளிப்பட்டி, காடம்பள்ளம் ஆகிய ஐந்து இடங்களில் கலிங்குகள் அமைத்து மழைக் காலங்களில் கிடைக்கும் நீரை பயன்படுத்தி 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சுரங்கம் அமைக்கும் பணியினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
சுரங்கம் அமைக்கும் பணியினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

அய்யாறு ஆற்றின் கிளை நதிகளில் கிடைக்கும் மழைநீரை இருங்குளிப்பட்டியில் அமைக்கப்பட்டுவரும் கலிங்கில் இருந்து ஆயிரத்து953 மீட்டர் தூரம் சுரங்கம் அமைத்து, செல்லிப்பட்டிக்கு தண்ணீரை கொண்டு சென்று அங்கிருந்து இருந்து குழாய்மூலம் கொல்லிமலையின் தெற்குப் பகுதியில் உள்ள கொல்லிமலையின் அடிவாரத்தில் நீர்மின் நிலையம் அமைத்து 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

சுரங்கம் அமைக்கும் பணி
சுரங்கம் அமைக்கும் பணி

கொல்லிமலை நீர்மின் திட்டத்தின் கீழ் தெளியங்கூடு பகுதியில் நீரினை சேகரிப்பதற்காக கட்டப்பட்டுவரும் கலிங்குகள், சுரங்க பாதைகளை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின் பேசிய ஆட்சியர் " இந்த பணிகள் 2023ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்கும். இத்திட்டத்தின் மூலம் வருடத்திற்கு 71.23 மில்லியன் யூனிட் மின்சாரம் கிடைக்கும். கொல்லிமலை நீர்மின் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுவரும் கலிங்குகளில் தேக்கப்படும் தண்ணீரால் கொல்லிமலை பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடுநீர்மின் திட்ட பணிகளால் கொல்லிமலை பகுதியில் சுற்றுலா மேம்படும்". எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மின்கம்பியில் சிக்கிய குரங்கை மீட்ட இளைஞர்களுக்கு பாராட்டு!

கொல்லிமலை மலைவாழ் மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அய்யாறு நீரை கொண்டு 338 கோடி ரூபாய் மதிப்பில் 20 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் திட்டம் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதன்கீழ் வளப்பூர் நாடு கிராம பகுதிகளில் அய்யாறு ஆற்றின் கிளை ஓடைகளின் குறுக்கே அச்சங்காடுபட்டி, கோவிலூர், தெளியங்கூடு, இருங்குளிப்பட்டி, காடம்பள்ளம் ஆகிய ஐந்து இடங்களில் கலிங்குகள் அமைத்து மழைக் காலங்களில் கிடைக்கும் நீரை பயன்படுத்தி 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சுரங்கம் அமைக்கும் பணியினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
சுரங்கம் அமைக்கும் பணியினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

அய்யாறு ஆற்றின் கிளை நதிகளில் கிடைக்கும் மழைநீரை இருங்குளிப்பட்டியில் அமைக்கப்பட்டுவரும் கலிங்கில் இருந்து ஆயிரத்து953 மீட்டர் தூரம் சுரங்கம் அமைத்து, செல்லிப்பட்டிக்கு தண்ணீரை கொண்டு சென்று அங்கிருந்து இருந்து குழாய்மூலம் கொல்லிமலையின் தெற்குப் பகுதியில் உள்ள கொல்லிமலையின் அடிவாரத்தில் நீர்மின் நிலையம் அமைத்து 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

சுரங்கம் அமைக்கும் பணி
சுரங்கம் அமைக்கும் பணி

கொல்லிமலை நீர்மின் திட்டத்தின் கீழ் தெளியங்கூடு பகுதியில் நீரினை சேகரிப்பதற்காக கட்டப்பட்டுவரும் கலிங்குகள், சுரங்க பாதைகளை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின் பேசிய ஆட்சியர் " இந்த பணிகள் 2023ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்கும். இத்திட்டத்தின் மூலம் வருடத்திற்கு 71.23 மில்லியன் யூனிட் மின்சாரம் கிடைக்கும். கொல்லிமலை நீர்மின் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுவரும் கலிங்குகளில் தேக்கப்படும் தண்ணீரால் கொல்லிமலை பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடுநீர்மின் திட்ட பணிகளால் கொல்லிமலை பகுதியில் சுற்றுலா மேம்படும்". எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மின்கம்பியில் சிக்கிய குரங்கை மீட்ட இளைஞர்களுக்கு பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.