ETV Bharat / state

மாணவனை அடித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை - student

நாகப்பட்டினம்: மாணவரை பிரம்பால் அடித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர்கள் கல்வித் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சி.எஸ்.ஐ அரசு உதவி பெறும் பள்ளி
author img

By

Published : Jul 31, 2019, 5:32 PM IST


நாகை டவுனை அடுத்த அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சலீம் ராஜா. இவரது மகனான முகம்மது அனஸ் அந்தப் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஆசிரியர் வகுப்பறையில் இல்லாததால், வகுப்பறையில் இருந்து வெளியேறி பக்கத்து வகுப்பு நண்பரகளுடன் பள்ளி வளாகத்தில் அனஸ் விளையாடியுள்ளார். இதனைக் கண்ட தலைமை ஆசிரியர் தன்ராஜ், உடற்கல்வி ஆசிரியர் ஸ்டீபன் ஆகியோர் விளையாடிக்கொண்டிருந்த முகமது அனஸ், யூசுப், ஹரிபாலன் ஆகிய மூவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் முகமது அனஸுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

காயமடைந்த சிறுவன்
காயமடைந்த சிறுவன்

பின்னர் இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட நாகை சி.எஸ்.ஐ அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் மீது கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிஎஸ்ஜ அரசு உதவி பெறும்பள்ளி


நாகை டவுனை அடுத்த அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சலீம் ராஜா. இவரது மகனான முகம்மது அனஸ் அந்தப் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஆசிரியர் வகுப்பறையில் இல்லாததால், வகுப்பறையில் இருந்து வெளியேறி பக்கத்து வகுப்பு நண்பரகளுடன் பள்ளி வளாகத்தில் அனஸ் விளையாடியுள்ளார். இதனைக் கண்ட தலைமை ஆசிரியர் தன்ராஜ், உடற்கல்வி ஆசிரியர் ஸ்டீபன் ஆகியோர் விளையாடிக்கொண்டிருந்த முகமது அனஸ், யூசுப், ஹரிபாலன் ஆகிய மூவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் முகமது அனஸுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

காயமடைந்த சிறுவன்
காயமடைந்த சிறுவன்

பின்னர் இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட நாகை சி.எஸ்.ஐ அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் மீது கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிஎஸ்ஜ அரசு உதவி பெறும்பள்ளி
Intro:நாகையில் தொடரும், ஆசிரியர்களின் பிரம்படி கலாச்சாரம்.பெற்றோர்கள் கலக்கம்.


Body:நாகையில் தொடரும், ஆசிரியர்களின் பிரம்படி கலாச்சாரம்.பெற்றோர்கள் கலக்கம்.

நாகை அந்தோனியார் கோவில் தெருவை சேர்ந்த சலீம் ராஜா என்பவரது மகன் முகம்மது அனஸ். இவர் நாகையில் உள்ள சி.எஸ்.ஐ அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஆசிரியர் வகுப்பறையில் இல்லாத காரணத்தால் பள்ளி வளாகத்தில் சக நண்பர்களுடன் முகமது ஆனால் விளையாடி உள்ளார். இதனை கண்ட தலைமை ஆசிரியர் தன்ராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஸ்டீபன் ஆகியோர் முகமது அனஸ், யூசுப், ஹரிபாலன் ஆகிய மூவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இரண்டு ஆசிரியர்களும் மாறி மாறி தாக்கியதில் இரண்டு கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்த முகமது அனஷை பெற்றோர்கள் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

நாகை நகர காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்து மனு ரசீது பெற்று இரண்டு தினங்கள் ஆகியும் காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனைப்படும் சிறுவனின் பெற்றோர், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இரண்டு ஆசிரியர்களையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சிறுவனுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற நிலையில், பள்ளி குழந்தைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட நாகை சி.எஸ்.ஐ அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் மீது கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாகையில் ஆசிரியர் தாக்கப்பட்ட தாக்கப்பட்டதில் மாணவன் காயமடைந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.