ETV Bharat / state

2021 தேர்தலுக்கு முன்பே ரஜினி அரசியலுக்கு வருவார் - எஸ்.வி.சேகர் - cinema director s.v.sekar press meet

நாகப்பட்டினம்: 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

s.v.sekar
s.v.sekar
author img

By

Published : Jan 13, 2020, 10:04 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேசுவரர் ஆலயத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்த நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் பாஜக தலைவர் நியமன பட்டியலில் தனது பெயர் உள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டால் சிறப்பாக செயல்படுவேன், சாதி அரசியல் இருக்காது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்த திமுக தற்போது அதனை எதிர்க்கிறது. பிரசாந்த் கிஷோருக்கு 380 கோடி ரூபாய் பணம் கொடுக்க உள்ள திமுக அதனை அவரது கட்சியினருக்கு வழங்கினால் ஓட்டுகளாவது கிடைக்கும். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 50 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெறாது. இந்திய பொருளாதார வீழ்ச்சியால் யாரும் உணவின்றி இருக்கவில்லை.

எஸ்வி சேகர் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து திமுக கூட்டணி கட்சியினர் தவறாக பரப்புரை செய்து வருகின்றனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னரே ரஜினி அரசியலுக்கு வருவார்" என தெரிவித்தார்.

"பிடிக்காத நபரிடம் அமைதியாக இருப்பேன்" - மாணவிக்கு பதிலளித்த முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி

மேலும், பிரதமர் மோடி செய்த சாதனைகள் சட்டங்கள் கருத்துக்கள் குறித்து தமிழ்நாட்டு மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பாஜகவினர் தவற விட்டனர் என்றார்.

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேசுவரர் ஆலயத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்த நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் பாஜக தலைவர் நியமன பட்டியலில் தனது பெயர் உள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டால் சிறப்பாக செயல்படுவேன், சாதி அரசியல் இருக்காது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்த திமுக தற்போது அதனை எதிர்க்கிறது. பிரசாந்த் கிஷோருக்கு 380 கோடி ரூபாய் பணம் கொடுக்க உள்ள திமுக அதனை அவரது கட்சியினருக்கு வழங்கினால் ஓட்டுகளாவது கிடைக்கும். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 50 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெறாது. இந்திய பொருளாதார வீழ்ச்சியால் யாரும் உணவின்றி இருக்கவில்லை.

எஸ்வி சேகர் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து திமுக கூட்டணி கட்சியினர் தவறாக பரப்புரை செய்து வருகின்றனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னரே ரஜினி அரசியலுக்கு வருவார்" என தெரிவித்தார்.

"பிடிக்காத நபரிடம் அமைதியாக இருப்பேன்" - மாணவிக்கு பதிலளித்த முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி

மேலும், பிரதமர் மோடி செய்த சாதனைகள் சட்டங்கள் கருத்துக்கள் குறித்து தமிழ்நாட்டு மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பாஜகவினர் தவற விட்டனர் என்றார்.

Intro:பிரதமர் மோடி செய்த சாதனைகள், சட்டங்கள், கருத்துக்கள் குறித்து தமிழக மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பாஜகவினர் தவறவிட்டனர். பாஜக தலைவர் ஆனால் சிறப்பாக செயல்படுவேன் திருக்கடையூரில் நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி:-


Body:நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேசுவரர் ஆலயத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்த நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் செய்தியாளர்களை சந்தித்தார்; அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் பாஜக தலைவர் நியமன பட்டியல் தனது பெயர் உள்ளதாகவும், தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டால் சிறப்பாக செயல்படும் என்றும் ஜாதி அரசியல் செய்யக்கூடாது என்றார். அரசியலமைப்பு சட்டங்கள் பலவற்றுக்கு பொதுமக்களுக்கு அர்த்தம் தெரியாது. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்த திமுக தற்போது அதனை எதிர்த்து. பிரசாந் கிஷோருக்கு 380 கோடி ரூபாய் பீஸ் தர உள்ள திமுக அதனை தனது கட்சியினருக்கு வழங்கினால் ஓட்டுகளாவது கிடைக்கும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக 50 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெறாது. பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியாவில் 3 சதவீதமாக இருந்த முஸ்லிம்கள் தற்போது 20 சதவீதம் உள்ளனர். எனவே இந்தியா முஸ்லிம்களுக்கு எதிரான நாடு அல்ல. இலங்கையிலுள்ள ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட காரணமான கட்சிகள் திமுகவும் காங்கிரசும் தான். மோடி இலங்கை தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை கட்டித் தந்துள்ளார். சிறுபான்மை பிரிவை சார்ந்த காவல்துறை அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்களும் சிறுபான்மையினர் என்பதால் திமுக வாயை பொத்தி மௌனம் காக்கிறது. இந்திய பொருளாதார வீழ்ச்சியால் யாரும் உணவின்றி இருக்கவில்லை. கம்யூனிஸ்ட் அருணன் போன்றவர்களால் ஜாதிக்கும், மதத்திற்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள்களாக உள்ளனர். முன்பெல்லாம் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு இருந்தது அதனால் நாட்டில் மக்கள் ஒழுக்கத்துடன் இருந்தனர். தற்போது நீதிபோதனை வகுப்பு இல்லாததால் ஒழுக்கம் கெட்டுவிட்டது. தமிழகத்தில் குடியுரிமை சட்டம் குறித்து திமுக கூட்டணி கட்சியினர் தவறாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ.வில்சன் குடும்பத்திற்கு 1 கோடி நிதி வழங்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரே ரஜினி அரசியலுக்கு வருவார் என்றும் தெரிவித்தார். பிரதமர் மோடி செய்த சாதனைகள் சட்டங்கள் கருத்துக்கள் குறித்து தமிழக மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பாஜகவினர் தவற விட்டனர் என்றார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.