ETV Bharat / state

21ஆம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு அவலம்: ஒதுக்கப்பட்ட குடும்பம்; கலெக்டர் ஆபிஸில் குடியேற முயற்சி - மயிலாடுதுறை

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறி சமைத்து சாப்பிட முயற்சி செய்த குடும்பத்தினரை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறிய குடும்பம்
Etv Bharat
author img

By

Published : Dec 19, 2022, 7:48 PM IST

ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறிய குடும்பம்

மயிலாடுதுறை: சீர்காழி தாலுகா பூம்புகாரைச் சேர்ந்த மீனவர் லெட்சுமணன், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் கிராமத்தில் தங்கி மீன்பிடித்து வந்தார். பூம்புகாரில் உள்ள மீனவர்கள், வெளியூர் சென்று மீன்பிடிக்கக் கூடாது என்று கிராம பஞ்சாயத்தார் ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

ஆனால், லெட்சுமணன் குடும்பத்தினர் ஊர் கட்டுப்பாட்டை மீறி வெளியூரில் தங்கி மீன்பிடித்து வந்த காரணத்தால், ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தும்; ஊரில் உள்ளவர்கள் இவர்கள் குடும்பத்துடன் பேசினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தண்டோரா போட்டும் அறிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர்ந்து பலமுறை லெட்சுமணன் குடும்பத்தினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில் புகார் அளித்து வந்தனர். இருப்பினும் கடந்த 4 ஆண்டுகளைக் கடந்தும் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாகவும் எவ்வித நடவடிக்கை எடுக்காத காரணத்தால், பல ஆண்டுகளாக வருமானத்திற்கு வழி இன்றி குடும்பத்துடன் தவித்து வருவதாகவும் லெட்சுமணன் தெரிவிக்கின்றார்.

இந்நிலையில் லெட்சுமணன் தனது குடும்பத்தினருடன் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் இரண்டு நாளில் பிரச்னையைப் பேசி தீர்ப்பதாக உறுதி அளித்திருந்தனர்.

ஒரு வாரம் கடந்த நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, மீனவர் லெட்சுமணனின் மகன் மீனவர் வினோத் மற்றும் அவரது மனைவி குணவதி ஆகிய இருவர் இன்று (டிச.19) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசியக் கொடி கம்பத்தின் கீழே அடுப்பு வைத்து சமையல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கே அவர்கள் உடன்படாத காரணத்தால் காவல் துறையினர் அவர்களது அடுப்பை அணைத்து வலுக்கட்டாயமாக தம்பதியை வெளியேற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: நடிகர் அஜித்குமார் பெயரில் பண மோசடி - நெல்லையில் பரபரப்பு

ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறிய குடும்பம்

மயிலாடுதுறை: சீர்காழி தாலுகா பூம்புகாரைச் சேர்ந்த மீனவர் லெட்சுமணன், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் கிராமத்தில் தங்கி மீன்பிடித்து வந்தார். பூம்புகாரில் உள்ள மீனவர்கள், வெளியூர் சென்று மீன்பிடிக்கக் கூடாது என்று கிராம பஞ்சாயத்தார் ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

ஆனால், லெட்சுமணன் குடும்பத்தினர் ஊர் கட்டுப்பாட்டை மீறி வெளியூரில் தங்கி மீன்பிடித்து வந்த காரணத்தால், ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தும்; ஊரில் உள்ளவர்கள் இவர்கள் குடும்பத்துடன் பேசினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தண்டோரா போட்டும் அறிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர்ந்து பலமுறை லெட்சுமணன் குடும்பத்தினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில் புகார் அளித்து வந்தனர். இருப்பினும் கடந்த 4 ஆண்டுகளைக் கடந்தும் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாகவும் எவ்வித நடவடிக்கை எடுக்காத காரணத்தால், பல ஆண்டுகளாக வருமானத்திற்கு வழி இன்றி குடும்பத்துடன் தவித்து வருவதாகவும் லெட்சுமணன் தெரிவிக்கின்றார்.

இந்நிலையில் லெட்சுமணன் தனது குடும்பத்தினருடன் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் இரண்டு நாளில் பிரச்னையைப் பேசி தீர்ப்பதாக உறுதி அளித்திருந்தனர்.

ஒரு வாரம் கடந்த நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, மீனவர் லெட்சுமணனின் மகன் மீனவர் வினோத் மற்றும் அவரது மனைவி குணவதி ஆகிய இருவர் இன்று (டிச.19) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசியக் கொடி கம்பத்தின் கீழே அடுப்பு வைத்து சமையல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கே அவர்கள் உடன்படாத காரணத்தால் காவல் துறையினர் அவர்களது அடுப்பை அணைத்து வலுக்கட்டாயமாக தம்பதியை வெளியேற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: நடிகர் அஜித்குமார் பெயரில் பண மோசடி - நெல்லையில் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.