ETV Bharat / state

‘தூர்வாரிய மணல் எங்கே?’ - அடுக்கடுக்கான கேள்விகளால் திருதிருவென முழித்த அலுவலர்கள்!

நாகப்பட்டினம்: ஆறுகளில் தூர்வாரிய மணல் எங்கே? என்று பொதுப்பணித் துறை கூடுதல் செயலர் கேட்ட கேள்விக்கு, அலுவலர்கள் திருதிருவென முழித்த நிகழ்வு பொதுமக்களிடையே சலசப்பை ஏற்படுத்தியது.

author img

By

Published : Aug 19, 2019, 5:46 AM IST

Updated : Aug 19, 2019, 8:14 AM IST

officer question

நாகை மாவட்டத்தில் பொதுப்பணித் துறை சார்பில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 82 குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆறுகளில் தூர்வாருதல், மதகுகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளும் விவசாய சங்கங்களின் சார்பில் நடைபெற்றுவருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தப் பணிகள் அனைத்தும் ஆளும்கட்சியினர் போலியான விவசாய சங்கங்களின் பெயரில் மேற்கொண்டுவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூர்வாரிய மணல் எங்கே ? முழிக்கும் அதிகாரிகள்

இந்தப் பணிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பொதுப்பணித் துறை கூடுதல் செயலர் பாலாஜி நேற்று நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அருகே உள்ள சேமங்கலம் அய்யாவையனாற்றில் தூர்வாரப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.

அப்போது, ஆற்றை தூர்வாரியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டிய பாலாஜி, 100 மீட்டர் அளவிற்கு தூர்வாரியிருந்தால், அதில் கிடைக்கும் மண்ணை ஐந்து லாரிகளில் அப்புறப்படுத்தப்படும் என்று திட்ட மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர், தூர்வாரிய இடத்தில் ஐந்து லாரி மணல் எங்கே? அப்படி என்றால் திட்டமதிப்பீடு தவறா? என்று அலுவலர்களிடம் கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பினார். இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் அலுவலர்கள் மூவரும் திருதிருவென முழித்தக் காட்சி பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தில் பொதுப்பணித் துறை சார்பில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 82 குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆறுகளில் தூர்வாருதல், மதகுகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளும் விவசாய சங்கங்களின் சார்பில் நடைபெற்றுவருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தப் பணிகள் அனைத்தும் ஆளும்கட்சியினர் போலியான விவசாய சங்கங்களின் பெயரில் மேற்கொண்டுவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூர்வாரிய மணல் எங்கே ? முழிக்கும் அதிகாரிகள்

இந்தப் பணிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பொதுப்பணித் துறை கூடுதல் செயலர் பாலாஜி நேற்று நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அருகே உள்ள சேமங்கலம் அய்யாவையனாற்றில் தூர்வாரப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.

அப்போது, ஆற்றை தூர்வாரியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டிய பாலாஜி, 100 மீட்டர் அளவிற்கு தூர்வாரியிருந்தால், அதில் கிடைக்கும் மண்ணை ஐந்து லாரிகளில் அப்புறப்படுத்தப்படும் என்று திட்ட மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர், தூர்வாரிய இடத்தில் ஐந்து லாரி மணல் எங்கே? அப்படி என்றால் திட்டமதிப்பீடு தவறா? என்று அலுவலர்களிடம் கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பினார். இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் அலுவலர்கள் மூவரும் திருதிருவென முழித்தக் காட்சி பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:குடிமராமத்து பணிகளில் ஆறுகளில் தூர்வாறிய மணல் எங்கே? பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளரின் கிடுக்கிப்பிடி கேள்வியால் நடுரோட்டில் திணறிய பொதுப்பணித்துறை அதிகாரிகள்:-Body:நாகை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. 16கோடி ரூபாய் மதிப்பீட்டில், 82பணிகள் நடைபெறுகின்றன. ஆறுகளில் தூர்வாறுதல், மதகுகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகள் விவசாய சங்கங்களின் சார்பில் நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது. ஆனால், இந்த பணிகளை ஆளுங்கட்சியினர் போலியான விவசாய சங்கங்களின் பெயரில் மேற்கொண்டு வருவதால், பணிகள் தரமற்று இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை மெய்ப்பிக்கும் வகையில், இன்று, பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் ஆய்வு அமைந்தது. பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் பாலாஜி இன்று நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அருகே சேமங்கலம் அய்யாவையனாற்றில் தூர்வாறிய பகுதிகளை பார்வையிட்ட திரு பாலாஜி, 100மீட்டர் அளவிற்கு தூர்வாறியிருந்தால், அதில் கிடைக்கும் மண்ணை 5லாரிகளில் அப்புறப்படுத்தப்படும் என்று திட்ட மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தூர்வாறிய இடத்தில் 5லாரி மணல் எங்கே? அப்படி என்றால் திட்டமதிப்பீடு தவறா? இல்லை மணல் எங்கே என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினர். சுமார் 20நிமிடங்கள் வரையில் அதிகாரிகள், சாலையிலேயே தயங்கி நின்றனர். அதன்பின்னரும் பதில் வராததால், அடுத்த இடத்திற்கு ஆய்விற்கு கிளம்பிச்சென்றனர்.Conclusion:
Last Updated : Aug 19, 2019, 8:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.