ETV Bharat / state

ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த மத்திய அரசின் சர்ச்சை கருத்து: தடையை மீறி ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jan 28, 2020, 11:51 AM IST

நாகப்பட்டினம்: ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு மக்கள் கருத்துக்கேட்பு அவசியமில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பைக் கண்டித்து, பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் தடையை மீறி கண்டனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

protest against central govt comment on hydrocarbon project
protest against central govt comment on hydrocarbon project

ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு மக்கள் கருத்துக்கேட்பு அவசியமில்லை என்றும் மாநிலங்களின் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும் கூறிய மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்தும், ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், காவிரி டெல்டாவை பாதுகாக்க அதை வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், காவல் துறையினரின் தடையை மீறி கண்டனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

கண்ணாரத் தெருவிலிருந்து தொடங்கிய இப்பேரணி முக்கிய வீதிகள் வழியே தாலுகா அலுவலகம் வரையில் நடைபெற்றது. மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்கள், ஹைட்ரோகார்பன் திட்டங்களைக் கைவிடக்கோரியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், கோஷங்களை எழுப்பினர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டம்

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மீத்தேன் எதிப்புக் கூட்டமைப்பு ஜெயராமன், கருத்துக்கேட்பு தேவையில்லை என்ற அறிவிப்பை மத்திய அரசானது கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதுகின்றார். ஆனால் ஹைட்ரோகார்பன் திட்டமே தேவையில்லை என்று அவர் கேட்க வேண்டும் என்றும் சட்டப்பேரவை உடனடியாகக் கூட்டி இதற்காகச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் ஜெயராமன் கூறினார். இல்லையென்றால் காவிரி டெல்டா பாலைவனமாகும் என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: போடி கல்லூரி முறைகேடு: உயர் கல்வித் துறை பதிலளிக்க உத்தரவு

ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு மக்கள் கருத்துக்கேட்பு அவசியமில்லை என்றும் மாநிலங்களின் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும் கூறிய மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்தும், ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், காவிரி டெல்டாவை பாதுகாக்க அதை வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், காவல் துறையினரின் தடையை மீறி கண்டனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

கண்ணாரத் தெருவிலிருந்து தொடங்கிய இப்பேரணி முக்கிய வீதிகள் வழியே தாலுகா அலுவலகம் வரையில் நடைபெற்றது. மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்கள், ஹைட்ரோகார்பன் திட்டங்களைக் கைவிடக்கோரியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், கோஷங்களை எழுப்பினர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டம்

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மீத்தேன் எதிப்புக் கூட்டமைப்பு ஜெயராமன், கருத்துக்கேட்பு தேவையில்லை என்ற அறிவிப்பை மத்திய அரசானது கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதுகின்றார். ஆனால் ஹைட்ரோகார்பன் திட்டமே தேவையில்லை என்று அவர் கேட்க வேண்டும் என்றும் சட்டப்பேரவை உடனடியாகக் கூட்டி இதற்காகச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் ஜெயராமன் கூறினார். இல்லையென்றால் காவிரி டெல்டா பாலைவனமாகும் என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: போடி கல்லூரி முறைகேடு: உயர் கல்வித் துறை பதிலளிக்க உத்தரவு

Intro:ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மக்கள் கருத்துக்கேட்பு அவசியமில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து, பேராசிரியர் ஜெயராமன் தலைமையில், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் தடையை மீறி கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்:-Body:ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மக்கள் கருத்துக்கேட்பு அவசியமில்லை, மாநிலங்களின் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்தியும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், காவல்துறையினரின் தடையை மீறி கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்ணாரத்தெருவில் இருந்து துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியே தாலுகா அலுவலகம் வரையில் நடைபெற்றது. மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்கள், ஹைட்ரோகார்பன் திட்டங்களை கைவிடக்கோரியும், மத்திய, மாநில அரசுகளைக்கண்டித்தும், கோஷங்களை எழுப்பினர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மீத்தேன் ஜெயராமன், கருத்துக்கேட்பு தேவையில்லை என்ற அறிவிப்பை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் கடிதம் எழுதுகின்றார். ஹைட்ரோகார்பன் திட்டங்களே தேவையில்லை என்று கேட்க வேண்டும், சட்டமன்றத்தை உடனடியாக கூட்டி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், இல்லை என்றால் காவிரி டெல்டா பாலைவனமாகும். என்று கூறினார்.

பேட்டி:- பேராசிரியர் ஜெயராமன் - மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.