ETV Bharat / state

மளிகை கடைக்குள் நுழைந்த 'ஆவி' - சிசிடிவி காட்சியால் மக்கள் பீதி!

author img

By

Published : Jan 15, 2020, 10:39 AM IST

நாகை: மயிலாடுதுறை அருகே மளிகை கடைக்குள் ஆவி நுழைவது போல் இருக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

cctv footage
சிசிடிவி

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆக்கூரில் 'குறிஞ்சி' மளிகை கடை நடத்தி வருபவர் இப்ராஹிம். இவர் வழக்கம்போல் காலையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, கடைக்கு ஒருவர் வருவதுபோன்ற உருவம் சிசிடிவியில் தெரிந்துள்ளது. ஆனால், கடைக்கு வெளியே பார்த்தபோது யாரும் இல்லாததால் இப்ராஹிம் குழப்பம் அடைந்தார்.

சிசிடிவி காட்சி

இதையடுத்து, இப்ராஹிம் மீண்டும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்கையில், ஒரு உருவம் கடைக்குள் வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவ தொடங்கியுள்ளன. இச்சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வால்பாறையில் யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆக்கூரில் 'குறிஞ்சி' மளிகை கடை நடத்தி வருபவர் இப்ராஹிம். இவர் வழக்கம்போல் காலையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, கடைக்கு ஒருவர் வருவதுபோன்ற உருவம் சிசிடிவியில் தெரிந்துள்ளது. ஆனால், கடைக்கு வெளியே பார்த்தபோது யாரும் இல்லாததால் இப்ராஹிம் குழப்பம் அடைந்தார்.

சிசிடிவி காட்சி

இதையடுத்து, இப்ராஹிம் மீண்டும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்கையில், ஒரு உருவம் கடைக்குள் வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவ தொடங்கியுள்ளன. இச்சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வால்பாறையில் யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

Intro:மயிலாடுதுறை அருகே ஆவி நடமாட்டம் இருப்பதுபோன்ற சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவுவதால் மக்கள் அச்சம்:-Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆக்கூரில் குறிஞ்சி மளிகை கடை நடத்தி வருபவர் இப்ராஹிம். இவர் வழக்கம்போல் காலையில் கடை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த போது அவர் கடைக்கு ஒருவர் வருவதுபோல் உருவம் சிசிடிவியில் தெரிந்துள்ளது. கடை உரிமையாளர் இப்ராஹிம் கடைக்கு வெளியே வந்து பார்த்த போது யாரும் வரவில்லை. அப்போது சந்தேகமடைந்த அவர் சிசிடிவி காட்சிகளை மீண்டும் சோதனை செய்து பார்த்தபோது ஒரு உருவம் கடைக்குள் வருகிறது. அதை பார்த்ததும் அவர் அச்சமடைந்து அக்கம்பக்கத்தினரை கூப்பிட்டு வந்து சிசிடிவி காட்சிகளை காண்பித்துள்ளார். ஆவி கடைக்குள் வருவதை அனைவரும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இச்சம்பவம் ஆக்கூர் கிராமமக்களிடை பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.