ETV Bharat / state

ஆதரவற்றவர்களை ஆதரிக்கும் "பசியில்லா தமிழகம்" - latest nagappattinam district news in tamil

நாகப்பட்டினம்: "பசியில்லா தமிழகம்" எனும் சமூக அமைப்பினர் ஆதரவின்றி சாலையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பசியில்லா தமிழகம் அமைப்பின் சேவை
author img

By

Published : Oct 7, 2019, 7:39 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 'பசியில்லா தமிழகம்' என்ற அமைப்பில் எண்ணற்ற இளைஞர்கள் இணைந்து, தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் ஆதரவில்லாமல், சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை நகரப்பகுதியில் ஆதரவின்றி சாலையில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, முடி திருத்தம் செய்து, குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து உணவு வழங்கினர்.

'பசியில்லா தமிழகம்' அமைப்பின் கருணைப்பயணம்

மேலும் இந்த அமைப்பினர் சக மனிதர்களை நேசிக்கும் மனிதநேயத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினர். அவர்களின் இந்த செயல் பொதுமக்களிடத்தில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இதையும் படியுங்க:

தூய்மையில் தேசிய அளவில் சிறந்த மாநிலம் தமிழகம் - பிரதமர் விருது

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 'பசியில்லா தமிழகம்' என்ற அமைப்பில் எண்ணற்ற இளைஞர்கள் இணைந்து, தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் ஆதரவில்லாமல், சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை நகரப்பகுதியில் ஆதரவின்றி சாலையில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, முடி திருத்தம் செய்து, குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து உணவு வழங்கினர்.

'பசியில்லா தமிழகம்' அமைப்பின் கருணைப்பயணம்

மேலும் இந்த அமைப்பினர் சக மனிதர்களை நேசிக்கும் மனிதநேயத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினர். அவர்களின் இந்த செயல் பொதுமக்களிடத்தில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இதையும் படியுங்க:

தூய்மையில் தேசிய அளவில் சிறந்த மாநிலம் தமிழகம் - பிரதமர் விருது

Intro:ஆதரவின்றி சாலையில் சுற்றிதிரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை முடி திருத்தம் செய்து, குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து உணவு வழங்கும் சமூக அமைப்பு:-Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரப்பகுதியில் ஆதரவின்றி சாலையில் சுற்றிதிரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தேடி கண்டுபிடித்து முடி திருத்தம் செய்து, குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து உணவு வழங்கி வருகிறது பசியில்லா தமிழகம் என்ற அமைப்பினர். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பசியில்லா தமிழகம் அமைப்பு தமிழகம் முழுவதும் சாலைகளில்; ஆதரவில்லாமல் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை சுத்தப்படுத்தி மறுவாழ்வு கொடுக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. அந்தவகையில் மயிலாடுதுறை நகரப்பகுதியில் உள்ள அனாதையாக சுற்றிதிரிந்தவரை பிடித்து முடி திருத்தம் செய்து, குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து உணவு வழங்கினர். தொடாந்து அவருடன் செஃல்பி எடுத்துகொண்டு மகிழ்ந்தனர். மேலும் தமிழகம் முழுவதும் சக மனிதர்களை நேசிக்கும் மனிதநேயத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறினர்;. இவர்களின் இந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.