ETV Bharat / state

ஒரு கோடி மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் - ஒருவர் கைது!

author img

By

Published : May 18, 2020, 9:47 AM IST

மயிலாடுதுறை: மதுரையிலிருந்து மயிலாடுதுறைக்கு கடத்தி வரப்பட்ட ஒரு கோடி மதிப்பிலான 60 மூட்டை புகையிலைப் பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

one-million-rupees-worth-tobacco-smuggled-into-mayiladuthurai
one-million-rupees-worth-tobacco-smuggled-into-mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்டம் திருவாலங்காடு சோதனைச் சாவடியில், காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மயிலாடுதுறை நோக்கி, ‘காய்கறி, அவசரம்’ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வேகமாக வந்த சரக்கு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில், அந்த லாரியில் 60 மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களான ஹான்ஸ் 1,80,000 பாக்கெட்கள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, லாரி ஓட்டுநர் பூரணஜோதி (32) என்பவரை கைது செய்த காவல் துறையினர், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும், ஒரு கோடி மதிப்பிலான புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மயிலாடுதுறையில் புகையிலை பொருள்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், ஒரு கோடி மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:லோடுவேன் கவிழுந்து லோடுமேன் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் திருவாலங்காடு சோதனைச் சாவடியில், காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மயிலாடுதுறை நோக்கி, ‘காய்கறி, அவசரம்’ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வேகமாக வந்த சரக்கு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில், அந்த லாரியில் 60 மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களான ஹான்ஸ் 1,80,000 பாக்கெட்கள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, லாரி ஓட்டுநர் பூரணஜோதி (32) என்பவரை கைது செய்த காவல் துறையினர், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும், ஒரு கோடி மதிப்பிலான புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மயிலாடுதுறையில் புகையிலை பொருள்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், ஒரு கோடி மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:லோடுவேன் கவிழுந்து லோடுமேன் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.