ETV Bharat / state

144 தடை உத்தரவு: மதுபானம் வாங்க குவிந்த குடிமகன்கள்

author img

By

Published : Mar 25, 2020, 9:57 AM IST

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் நேற்று மாலை ஆறு மணி முதல் 144 தடை உத்தரவால் டாஸ்மாக் மதுபான கடையில் மது வாங்க குடிமகன்கள் கூட்டமாக அலைமோதினர்.

நாகப்பட்டினம்: மயிலாடுத்துறையில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவால் டாஸ்மாக் மதுபானக்கடையில் மது வாங்க குடிமகன்கள் கூட்டமாக அலைமோதினர்.
நாகப்பட்டினம்: மயிலாடுத்துறையில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவால் டாஸ்மாக் மதுபானக்கடையில் மது வாங்க குடிமகன்கள் கூட்டமாக அலைமோதினர்.

தமிழ்நாடில் கரோனா வைரஸின் பாதிப்பால் நேற்று மாலை முதல் தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்குவதற்காக குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது. மாலை ஆறு மணியுடன் கடை மூடப்படும் என்பதால் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு முண்டியடித்து மதுபானங்களை மொத்தமாக வாங்கி சென்றனர். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரிசையில் நின்று ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு மதுபானங்களை வாங்கி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்திய விதிகளை, காற்றில் பறக்கவிட்டு சமூக பொறுப்புணர்வின்றி அச்சமில்லாமல் குடிமகன்கள் மதுவை வாங்கி சென்றனர்.

இதைப்போல 144 தடை உத்தரவு நேற்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்த நிலையில் மயிலாடுதுறையில் அத்தியாவசிய கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பேருந்து நிலையத்தில் ஊருக்கு செல்லமுடியாமல் ஏராளமான பயணிகள் காத்துக்கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருசில தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களை இயங்குகின்றன. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஏராளமானோர் செல்வதை காண முடிகிறது. காவல் துறையினர் பொதுமக்களை வீடுகளுக்கு செல்லுமாறும் வீட்டைவிட்டு வெளியேறாதிர்கள் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் மயிலாடுதுறை பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி வருகிறது.

மேலும் 144 தடை உத்தரவால் நாகை மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆறு அருகே உள்ள ஆனைக்காரசத்திரம் சோதனைச் சாவடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 6 மணிக்கு பிறகு அந்த வழியாக வந்த இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எங்கே செல்கிறீர்கள் என கேட்டு அனுப்பி வைத்தனர்.

வீட்டிற்கு மட்டுமே செல்ல வேண்டும் என்றும், மீண்டும் இந்த வழியில் வரக்கூடாது என எச்சரித்து, 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் இதை பின்பற்ற வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதையடுத்து வாகனங்களில் வந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.

இதையும் படிக்க:144 தடை உத்தரவு: மதுக் கடையில் குவிந்த ‘குடி’மகன்கள்

தமிழ்நாடில் கரோனா வைரஸின் பாதிப்பால் நேற்று மாலை முதல் தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்குவதற்காக குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது. மாலை ஆறு மணியுடன் கடை மூடப்படும் என்பதால் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு முண்டியடித்து மதுபானங்களை மொத்தமாக வாங்கி சென்றனர். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரிசையில் நின்று ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு மதுபானங்களை வாங்கி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்திய விதிகளை, காற்றில் பறக்கவிட்டு சமூக பொறுப்புணர்வின்றி அச்சமில்லாமல் குடிமகன்கள் மதுவை வாங்கி சென்றனர்.

இதைப்போல 144 தடை உத்தரவு நேற்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்த நிலையில் மயிலாடுதுறையில் அத்தியாவசிய கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பேருந்து நிலையத்தில் ஊருக்கு செல்லமுடியாமல் ஏராளமான பயணிகள் காத்துக்கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருசில தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களை இயங்குகின்றன. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஏராளமானோர் செல்வதை காண முடிகிறது. காவல் துறையினர் பொதுமக்களை வீடுகளுக்கு செல்லுமாறும் வீட்டைவிட்டு வெளியேறாதிர்கள் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் மயிலாடுதுறை பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி வருகிறது.

மேலும் 144 தடை உத்தரவால் நாகை மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆறு அருகே உள்ள ஆனைக்காரசத்திரம் சோதனைச் சாவடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 6 மணிக்கு பிறகு அந்த வழியாக வந்த இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எங்கே செல்கிறீர்கள் என கேட்டு அனுப்பி வைத்தனர்.

வீட்டிற்கு மட்டுமே செல்ல வேண்டும் என்றும், மீண்டும் இந்த வழியில் வரக்கூடாது என எச்சரித்து, 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் இதை பின்பற்ற வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதையடுத்து வாகனங்களில் வந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.

இதையும் படிக்க:144 தடை உத்தரவு: மதுக் கடையில் குவிந்த ‘குடி’மகன்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.