ETV Bharat / state

நாகையில் கரும்பு விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் வேதனை

author img

By

Published : Jan 16, 2020, 5:03 PM IST

நாகை: மயிலாடுதுறையில் அதிக விளைச்சலால் கரும்பு விலை கடும் வீழ்ச்சியடைந்தது அதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கரும்பு விலை கடும் வீழ்ச்சி
கரும்பு விலை கடும் வீழ்ச்சி


நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கரும்பு விற்பனை கடும் வீழ்ச்சியடைந்தது. ஆண்டுதோறும் பொங்கலுக்கு ஐந்து தினங்களுக்கு முன்பே கரும்பு விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவது வழக்கம்.

மயிலாடுதுறையில் சில்லரை விற்பனையாளர்கள் 18க்கு ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பை வாங்கி வந்து 40 ரூபாய்க்கு விற்றனர்.

கரும்பு விலை கடும் வீழ்ச்சி

இந்த ஆண்டு கரும்பு அதிக விளைச்சல் காரணமாக விவசாயிகளிடம் தேங்கியது. இதனால் விவசாயிகளே தங்களிடம் தேங்கியிருந்த கரும்பை தாங்களே நேரடியாக கிராமம் கிராமமாகச் சென்று விலை மலிவாக விற்பனை செய்துள்ளனர்.

ஆகவே, நகரப் பகுதிகளில் கரும்பு வாங்கும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்தது. 40 ரூபாய்க்கு விற்பனையான கரும்பு, இன்று 8 ரூபாய் அளவிற்கு விலை குறைந்தது. மேலும் அதிகளவில் கரும்பு தேக்கமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். ஆகவே மயிலாடுதுறையின் பல்வேறு பகுதிகளில் கரும்பு குவிக்கப்பட்டு வாங்குவதற்கு ஆள் இல்லாமல் இருந்தது.

இதையும் படிங்க: கரும்பு விலை சரிவு: வேதனையில் விவசாயிகள்


நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கரும்பு விற்பனை கடும் வீழ்ச்சியடைந்தது. ஆண்டுதோறும் பொங்கலுக்கு ஐந்து தினங்களுக்கு முன்பே கரும்பு விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவது வழக்கம்.

மயிலாடுதுறையில் சில்லரை விற்பனையாளர்கள் 18க்கு ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பை வாங்கி வந்து 40 ரூபாய்க்கு விற்றனர்.

கரும்பு விலை கடும் வீழ்ச்சி

இந்த ஆண்டு கரும்பு அதிக விளைச்சல் காரணமாக விவசாயிகளிடம் தேங்கியது. இதனால் விவசாயிகளே தங்களிடம் தேங்கியிருந்த கரும்பை தாங்களே நேரடியாக கிராமம் கிராமமாகச் சென்று விலை மலிவாக விற்பனை செய்துள்ளனர்.

ஆகவே, நகரப் பகுதிகளில் கரும்பு வாங்கும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்தது. 40 ரூபாய்க்கு விற்பனையான கரும்பு, இன்று 8 ரூபாய் அளவிற்கு விலை குறைந்தது. மேலும் அதிகளவில் கரும்பு தேக்கமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். ஆகவே மயிலாடுதுறையின் பல்வேறு பகுதிகளில் கரும்பு குவிக்கப்பட்டு வாங்குவதற்கு ஆள் இல்லாமல் இருந்தது.

இதையும் படிங்க: கரும்பு விலை சரிவு: வேதனையில் விவசாயிகள்

Intro:ரூபாய் 50 க்கு விற்பனையான கரும்பு ரூபாய் 8-க்கு கூட விற்காததால் மயிலாடுதுறையில் சில்லரை விற்பனையாளர்கள் வேதனை:-


Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பொங்கல் கரும்பு விற்பனை படு வீழ்ச்சி அடைந்தது. வருடா வருடம் பொங்கல் சமயத்தில் 5 தினங்கள் கரும்பு விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவது வழக்கம். மயிலாடுதுறையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சில்லரை விற்பனை நடைபெறும். சில்லரை விற்பனையாளர்கள் இந்த ஆண்டு ரூபாய் 18க்கு விவசாயிகளிடம் கரும்பை விலை கொடுத்து வாங்கி வந்து வாடகை மற்றும் விற்பனை செலவு என அதை ரூபாய் 40 என்ற விலைக்கு விற்று வந்தனர். இந்த ஆண்டு நல்ல விளைச்சல் என்பதால் கரும்பு விவசாயிகளிடம் தேங்கா ஆரம்பித்தது. மயிலாடுதுறையில் பரவலாக கரும்பு ஒன்று ரூபாய் 50 லிருந்து ரூபாய் 25 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கரும்பு உற்பத்தி செய்த விவசாயிகளே தாங்கள் விற்காமல் வைத்திருந்த கரும்புகளை வெட்டி சென்று கிராமம் கிராமமாக விலை மலிவாக விற்பனை செய்துள்ளனர் இதனால் நகர்ப் பகுதிகளில் கரும்பு வாங்க வருவோர் மிகக் குறைந்ததால் மயிலாடுதுறையில் பல டன் கரும்பு விற்காமல் தேங்கியது ரூபாய் 50 க்கு விற்பனையான கரும்பை இன்றைக்கு 8 ரூபாய்க்கு கூட வாங்குவதற்கு ஆள் இல்லை மயிலாடுதுறையில் பல்வேறு பகுதிகளில் கரும்பு குவிக்கப்பட்டுள்ளது தவிர்க்கமுடியாமல் சில்லரை விற்பனையாளர்கள் மிகவும் நட்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்தனர்.

பேட்டி:- காமராஜ் - கரும்பு சில்லறை விற்பனையாளர்- மயிலாடுதுறை.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.