ETV Bharat / state

மயிலாடுதுறை புதிய மாவட்டமாக அறிவிப்பு - பல்வேறு கட்சியினர் கொண்டாட்டம்

author img

By

Published : Mar 24, 2020, 11:25 PM IST

நாகை: மயிலாடுதுறை புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

பல்வேறு கட்சியினர் கொண்டாட்டம்
பல்வேறு கட்சியினர் கொண்டாட்டம்

நாகை மாவட்டத்தைப் பிரித்து 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறையை சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதன் மூலம் 25 ஆண்டுகளாக போராடி வந்த மயிலாடுதுறை கோட்ட மக்களின் கனவு இன்று நிறைவேறியது.

பல்வேறு கட்சியினர் கொண்டாட்டம்

மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தும், முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தும் பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: புதிய விடுதி கோரி உடைமைகளுடன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

நாகை மாவட்டத்தைப் பிரித்து 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறையை சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதன் மூலம் 25 ஆண்டுகளாக போராடி வந்த மயிலாடுதுறை கோட்ட மக்களின் கனவு இன்று நிறைவேறியது.

பல்வேறு கட்சியினர் கொண்டாட்டம்

மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தும், முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தும் பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: புதிய விடுதி கோரி உடைமைகளுடன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.