ETV Bharat / state

நாகையில் மின்கசிவால் மளிகைக் கடை எரிந்து நாசம்! - Massive fire breakout in grocery shop

நாகை : மின்கசிவு காரணமாக மளிகைக்கடை தீப்பற்றி எரிந்ததில், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

மயிலையில் மின்கசிவால் மளிகைக் கடை எரிந்து நாசம்!
மயிலையில் மின்கசிவால் மளிகைக் கடை எரிந்து நாசம்!
author img

By

Published : Aug 23, 2020, 11:43 AM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே கஞ்சா நகரம் மெயின் ரோட்டில் ராஜாகண்ணு என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று (ஆக. 22) நள்ளிரவில் இவரது கடை திடீரென்று தீப்பற்றி எரிந்ததை அடுத்து, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

தொடர்ந்து, தீ விபத்து பற்றிய தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், துரிதமாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மயிலையில் மின்கசிவால் மளிகைக் கடை எரிந்து நாசம்!

மளிகைக் கடையில் மின்கசிவு ஏற்பட்டதால், இந்தத் தீவிபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்தத் தீ விபத்தால், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகை, தளவாடப் பொருள்கள் எரிந்து சேதமாகியுள்ளன. செம்பனார்கோவில் காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க...யூடியூப் பார்த்து கற்று கொள்ளையடித்த கல்லூரி மாணவன் கைது!

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே கஞ்சா நகரம் மெயின் ரோட்டில் ராஜாகண்ணு என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று (ஆக. 22) நள்ளிரவில் இவரது கடை திடீரென்று தீப்பற்றி எரிந்ததை அடுத்து, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

தொடர்ந்து, தீ விபத்து பற்றிய தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், துரிதமாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மயிலையில் மின்கசிவால் மளிகைக் கடை எரிந்து நாசம்!

மளிகைக் கடையில் மின்கசிவு ஏற்பட்டதால், இந்தத் தீவிபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்தத் தீ விபத்தால், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகை, தளவாடப் பொருள்கள் எரிந்து சேதமாகியுள்ளன. செம்பனார்கோவில் காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க...யூடியூப் பார்த்து கற்று கொள்ளையடித்த கல்லூரி மாணவன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.