நாகப்பட்டினம்: தமிழர்களின் தொன்மையான விளையாட்டு மல்லர் கம்பம். சிலம்பம், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளை போன்று பிரசித்தி பெற்ற விளையாட்டு இது.
மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் மல்லர் விளையாட்டை அரசு விளையாட்டாக அங்கீகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழ்நாடு முழுவதும் 200 மல்லர் விளையாட்டு வீரர்கள் உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த உலகதுரை என்னும் உடற்பயிற்சி ஆசிரியர் பலருக்கும் இவ்விளையாட்டை இலவசமாக பயிற்றுவித்து வருகிறார்.
இந்நிலையில், பாரம்பரிய விளையாட்டான மல்லர் விளையாட்டை இளைஞர்கள் கற்றுக்கொள்ளும் வகையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மல்லர் விளையாட்டு பயிற்சியைத் தொடங்கி வைக்கிறார்.
இவ்விழா செங்கல்பட்டைச் சேர்ந்த தேசிய பயிற்சியாளர் மல்லர் குரு. முருகன் தலைமையில் தொடங்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: Padma awards 2022: மறைந்த பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷண் விருது