மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை கடந்த மாதம் புதிதாக அமைக்கப்பட்டது. இதனால் பாதாள சாக்கடை ஆள் நுழைவு தொட்டி மூடப்பட்டது. இந்த பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து அதிகரித்து வந்ததால் புதிய மூடி பொருத்தும் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், தற்போது ஊரடங்கை பயன்படுத்தி இச்சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆள்நுழைவு தொட்டிக்கு மூடி பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாகன போக்குவரத்து இல்லாத நிலையில் நகராட்சி நிர்வாகத்தினர் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.