ETV Bharat / state

அரசு செவிலியரின் அலட்சியத்தால் உடலுக்குள் சென்ற ஊசி - உயிர் வாழப் போராடும் பெண்! - Negligence of Nagai Government Doctors

நாகை: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்மணி ஒருவர் காய்ச்சலுக்காக ஊசி போட்ட போது ஊசி உடைந்து உள்ளே சென்று, அவரின் உயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிர்வாழ போராடும் பெண்!
author img

By

Published : Nov 22, 2019, 3:19 PM IST

நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் ஈசானியத்தெருவை சேர்ந்தவர் பார்வதி (54). கடந்த 9ஆம் தேதி அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காகச் சென்ற பார்வதிக்கு அங்குள்ள செவிலியர் இடுப்பில் ஊசி போட்டுள்ளார். மருந்து முழுவதையும் செலுத்திய பின்னர் ஊசியை வெளியே எடுக்கமுடியவில்லை.

Injection into the patient body in  nagappattinam
பார்வதியின் எக்ஸ்ரே பதிவு

இதனையடுத்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சீர்காழி அரசு மருத்துவமனைக்குச் சென்ற பார்வதி எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து போது, ஊசி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் வீட்டுக்கு வந்த பார்வதி வலியால் துடித்துள்ளார். மூன்று நாட்களுக்குப் பின்னர் பார்வதியின் வீட்டுக்கு அந்த மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், ஊசி உள்ளே இருப்பதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு வரவும் அறிவுறுத்தியுள்ளார்.

சீர்காழியில் சிகிச்சைக்குச் சென்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை

அங்கு சென்ற பார்வதிக்கு மருத்துவர்கள் மீண்டும் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து, ஊசி உடலின் ஆழத்துக்குள் சென்று விட்டதாகவும், அதனை அகற்ற முடியாது என்றும் தகவல் தெரிவித்தனர். மேலும் மருத்துவர்கள் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லுமாறும் தெரிவித்துள்ளனர்.

போதிய வருமானம் இல்லாதநிலையில், பெரிய பாதிப்பு ஏற்படும் முன் அரசே தனக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார்வதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:

ஃபாத்திமா மரணத்துக்கு சிபிஐ விசாரணை கோரிய வழக்கு - தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் ஈசானியத்தெருவை சேர்ந்தவர் பார்வதி (54). கடந்த 9ஆம் தேதி அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காகச் சென்ற பார்வதிக்கு அங்குள்ள செவிலியர் இடுப்பில் ஊசி போட்டுள்ளார். மருந்து முழுவதையும் செலுத்திய பின்னர் ஊசியை வெளியே எடுக்கமுடியவில்லை.

Injection into the patient body in  nagappattinam
பார்வதியின் எக்ஸ்ரே பதிவு

இதனையடுத்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சீர்காழி அரசு மருத்துவமனைக்குச் சென்ற பார்வதி எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து போது, ஊசி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் வீட்டுக்கு வந்த பார்வதி வலியால் துடித்துள்ளார். மூன்று நாட்களுக்குப் பின்னர் பார்வதியின் வீட்டுக்கு அந்த மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், ஊசி உள்ளே இருப்பதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு வரவும் அறிவுறுத்தியுள்ளார்.

சீர்காழியில் சிகிச்சைக்குச் சென்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை

அங்கு சென்ற பார்வதிக்கு மருத்துவர்கள் மீண்டும் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து, ஊசி உடலின் ஆழத்துக்குள் சென்று விட்டதாகவும், அதனை அகற்ற முடியாது என்றும் தகவல் தெரிவித்தனர். மேலும் மருத்துவர்கள் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லுமாறும் தெரிவித்துள்ளனர்.

போதிய வருமானம் இல்லாதநிலையில், பெரிய பாதிப்பு ஏற்படும் முன் அரசே தனக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார்வதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:

ஃபாத்திமா மரணத்துக்கு சிபிஐ விசாரணை கோரிய வழக்கு - தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Intro:சீர்காழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சலுக்கு ஊசி போட்ட போது ஊசி உடைந்து உள்ளே சென்ற பரிதாபம் 10 நாட்களாக வலியால் அவதியுரும் பெண். அரசு நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை.Body:நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஈசானியதெருவை சேர்ந்தவர் பார்வதி(54). கடந்த 9ஆம் தேதி ஈசானியத்தெருவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சலுக்காக பார்வதி சிகிச்சை பெற்றுள்ளார். அங்குள்ள செவிலியர் பார்வதிக்கு இடுப்பில் ஊசி போட்டுள்ளார். மருந்து முழுவதும் இறங்கிய பின் ஊசியை எடுத்த போது ஊசி வெளியே வராமல் ஊள்ளேயே இருந்துள்ளது. இதனையடுத்து டாக்டரின் அலோசனையின் பேரில் சீர்காழி அரசு மருத்துவம னைக்கு பார்வதியை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்து விட்டு ஊசி எதுவும் இல்லை என கூறிவிட்டனர். வீட்டுக்கு வந்த பார்வதிக்கு வலியால் துடித்துள் ளார். மூன்று நாட்களுக்கு பின்னர் பார்வதியின் வீட்டுக்கு வந்த மருத்துவமனை ஊழியர் ஊசி உள்ளே இருப்பதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு வரவும் அறிவுறுத்தியுள்ளார். அங்கு சென்ற பார்வதிக்கு மீண்டும் எக்ஸ்ரே எடுத்து பார்த்த டாக்டர்கள் ஊசி ஆழத்திற்கு சென்று விட்டதாகவும், அதனை இங்கு அகற்றமுடியாது எனவும் கூறி அதிர்ச்சியை அளித்தனர். மேலும் அவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு தெரிவித்தனர். போதிய வருமானம் இல்லாததால் ஆரம்ப சுகாதா நிலையத்தில் சிகிச்சை பெற்ற நிலையில் அங்கு நடந்த தவறால் சிதம்பரம் சென்று சிகிச்சை பெற வசதியின்றி வீட்டிலேயே உள்ளார் பார்வதி. வலி அதிகரித்து வருவதால் ஏதேனும் பெரிய பாதிப்பு ஏற்படும் முன் அரசே அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.