ETV Bharat / state

அலுவலர்களிடம் மீனவர்கள் வாக்குவாதம்

தரங்கம்பாடி, தொடுவாய் கிராமங்களில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983 குறித்து ஆய்வு செய்ய வந்த அலுவலர்களைத் தடுத்து நிறுத்தி மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆய்வு செய்ய முடியாமல் அலுவலர்கள் திரும்பிச் சென்றனர்.

author img

By

Published : Jul 27, 2021, 2:32 PM IST

அலுவலர்களிடம் மீனவர்கள் வாக்குவாதம்
அலுவலர்களிடம் மீனவர்கள் வாக்குவாதம்

மயிலாடுதுறை: திருமுல்லைவாசல், மடவாமேடு, பூம்புகார், சந்திரபாடி உள்ளிட்ட இடங்களில் மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், அதனை மறுக்கும் பட்சத்தில் 1983 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள 21 சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி அண்மையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியர், சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க முடியாது, அதற்கு பதிலாக மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்திருந்தார்.

எட்டு நாள்களாக ஆய்வு

இந்த அறிவிப்பையடுத்து கடந்த எட்டு நாள்களாக மீன்வளத்துறை மற்றும் மீன்வளத்துறை அமலாக்க பிரிவு காவல்துறையினர், மீனவ கிராமங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.

அலுவலர்களிடம் மீனவர்கள் வாக்குவாதம்

இந்தநிலையில் தரங்கம்பாடி மற்றும் தொடுவாய் கிராமங்களில் அலுவலர்கள் இன்று (ஜூலை 27) திடீர் ஆய்வு மேற்கொண்டனர். வலைகள், படகுகளின் நீளம், இஞ்சின் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னறிவிப்பின்றி ஆய்வு

தகவல் அறிந்த தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார் மற்றும் மீனவர்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர். தங்கள் கிராமத்தில் ஆய்வு செய்வது குறித்து எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் அனுமதியின்றி ஆய்வு மேற்கொள்வதாக கூறி அலுவலர்களைத் தடுத்து நிறுத்தினர்.

சுருக்குமடி வலை பயன்படுத்திய கிராமங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தங்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தனர்.

அலுவலர்கள் தடுத்து நிறுத்தம்

சுருக்குமடி வலைக்கு ஆதரவாக போராடிய பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு, சந்திரபாடி உள்ளிட்ட கிராமங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்த பின்னரே தங்கள் கிராமத்தில் அனுமதி பெற்று ஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறி அலுவலர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

இதனால் தரங்கம்பாடி,தொடுவாய் கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: சுருக்கு வலையைத் தடை செய்க: கடலில் கறுப்புக் கொடியுடன் மீனவர்கள் போராட்டம்

மயிலாடுதுறை: திருமுல்லைவாசல், மடவாமேடு, பூம்புகார், சந்திரபாடி உள்ளிட்ட இடங்களில் மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், அதனை மறுக்கும் பட்சத்தில் 1983 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள 21 சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி அண்மையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியர், சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க முடியாது, அதற்கு பதிலாக மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்திருந்தார்.

எட்டு நாள்களாக ஆய்வு

இந்த அறிவிப்பையடுத்து கடந்த எட்டு நாள்களாக மீன்வளத்துறை மற்றும் மீன்வளத்துறை அமலாக்க பிரிவு காவல்துறையினர், மீனவ கிராமங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.

அலுவலர்களிடம் மீனவர்கள் வாக்குவாதம்

இந்தநிலையில் தரங்கம்பாடி மற்றும் தொடுவாய் கிராமங்களில் அலுவலர்கள் இன்று (ஜூலை 27) திடீர் ஆய்வு மேற்கொண்டனர். வலைகள், படகுகளின் நீளம், இஞ்சின் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னறிவிப்பின்றி ஆய்வு

தகவல் அறிந்த தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார் மற்றும் மீனவர்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர். தங்கள் கிராமத்தில் ஆய்வு செய்வது குறித்து எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் அனுமதியின்றி ஆய்வு மேற்கொள்வதாக கூறி அலுவலர்களைத் தடுத்து நிறுத்தினர்.

சுருக்குமடி வலை பயன்படுத்திய கிராமங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தங்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தனர்.

அலுவலர்கள் தடுத்து நிறுத்தம்

சுருக்குமடி வலைக்கு ஆதரவாக போராடிய பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு, சந்திரபாடி உள்ளிட்ட கிராமங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்த பின்னரே தங்கள் கிராமத்தில் அனுமதி பெற்று ஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறி அலுவலர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

இதனால் தரங்கம்பாடி,தொடுவாய் கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: சுருக்கு வலையைத் தடை செய்க: கடலில் கறுப்புக் கொடியுடன் மீனவர்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.