ETV Bharat / state

மது பாட்டில்களை அடித்து நொறுக்கிய மீனவப் பெண்கள்!

author img

By

Published : Jul 9, 2019, 4:51 PM IST

நாகப்பட்டினம்: கள்ளத்தனமாக மது விற்ற பெண்ணின் வீட்டினுள் நுழைந்து மது பாட்டில்களை மீனவப் பெண்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனவப் பெண்கள்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தில் கமலா என்ற பெண் சில ஆண்டுகளாக திருட்டுத்தனமாக மது விற்பனை செய்து வந்ததாகவும் இதனால் பலமுறை சிறைக்கு சென்று வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கமலா தொடர்ந்து மது விற்பனயில் ஈடுபட்டு வந்ததால் ஆவேசமடைந்த அப்பகுதி மீனவப் பெண்கள் தங்களது கணவர்கள் மதுவிற்கு அடிமையாகி தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, கமலாவின் வீட்டில் கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை அடித்து நொறுக்கி தீயிட்டுக் கொளுத்தினர்.

மது விற்ற பெண்ணின் வீட்டினுள் நுழைந்து மது பாட்டில்களை அடித்து நொறுக்கிய மீனவப் பெண்கள்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கமலா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இது குறித்து அப்பகுதி மீனவப் பெண்கள் கூறும்போது, ’நாகப்பட்டினம் மாவட்டம் அருகில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த காரைக்கால் அமைந்துள்ளதால், அங்கிருந்து விலை குறைவாக மதுபானங்களைக் கடத்திவந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் விற்பனை செய்கின்றனர். காவல்துறையினர் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்பவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ எனக் கோரிக்கைவிடுத்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தில் கமலா என்ற பெண் சில ஆண்டுகளாக திருட்டுத்தனமாக மது விற்பனை செய்து வந்ததாகவும் இதனால் பலமுறை சிறைக்கு சென்று வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கமலா தொடர்ந்து மது விற்பனயில் ஈடுபட்டு வந்ததால் ஆவேசமடைந்த அப்பகுதி மீனவப் பெண்கள் தங்களது கணவர்கள் மதுவிற்கு அடிமையாகி தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, கமலாவின் வீட்டில் கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை அடித்து நொறுக்கி தீயிட்டுக் கொளுத்தினர்.

மது விற்ற பெண்ணின் வீட்டினுள் நுழைந்து மது பாட்டில்களை அடித்து நொறுக்கிய மீனவப் பெண்கள்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கமலா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இது குறித்து அப்பகுதி மீனவப் பெண்கள் கூறும்போது, ’நாகப்பட்டினம் மாவட்டம் அருகில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த காரைக்கால் அமைந்துள்ளதால், அங்கிருந்து விலை குறைவாக மதுபானங்களைக் கடத்திவந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் விற்பனை செய்கின்றனர். காவல்துறையினர் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்பவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ எனக் கோரிக்கைவிடுத்தனர்.

Intro:கள்ளத்தனமான மது விற்பனையில் ஈடுபட்ட பெண் வீட்டில் நுழைந்து மது பாட்டில்களை துவம்சம் செய்த மீனவப் பெண்கள்.
Body:கள்ளத்தனமான மது விற்பனையில் ஈடுபட்ட பெண் வீட்டில் நுழைந்து மது பாட்டில்களை துவம்சம் செய்த மீனவப் பெண்கள்.


நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தில் கமலா என்பவர் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து திருட்டுத்தனமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இவர் மது விற்பனை தொடர்பாக பலமுறை சிறை சென்றநிலையில், தொடர்ந்து மது விற்பனையில் ஈடுபட்டு வந்ததை அடுத்து, அப்பகுதி மீனவ பெண்கள் இதனால் தங்கள் கணவர்கள் மதுவிற்கு அடிமையாகி தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை அடுத்து , ஆத்திரம் அடைந்த பெண்கள் கமலாவின் வீட்டிற்குச் சென்று அவர் திருட்டுத்தனமாக விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த வெளிமாநில,புதுச்சேரி மது பாட்டில்களை கைப்பற்றி வீட்டிற்கு வெளியே போட்டு உடைத்தும் தீயிட்டு கொளுத்தினர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கமலாவை கைது செய்தனர்.

நாகை மாவட்டம் அருகில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அமைந்துள்ளதை அடுத்து அங்கிருந்து விலை குறைவாக மதுபானங்களை திருட்டுத்தனமாக கடத்திவந்து நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதுபோல விற்பனை நடைபெற்று வருகிறது என்றும் இதனை நாகை மாவட்ட காவல் துறையினர் முறையாக கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.