ETV Bharat / state

குடிபோதையில் நண்பனை கொலை செய்தவர் மனசாட்சி உறுத்தியதால் சரண்! - nagapattinam latest news

நாகை: குடிபோதையில் நண்பனை கொலை செய்த நபர் மனசாட்சி உறுத்தியதால் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்துள்ளார்.

nagapattinam
nagapattinam
author img

By

Published : Jan 24, 2020, 11:16 PM IST

நாகை மாவட்டம் தரங்கம்பாடி பொறையாறு ஒழுகைமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர்கள் மணிமாறன்(26) ராகவி தம்பதி. மணிமாறனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி இரவு மணிமாறன் பழனியில் இருந்து வந்த அவரது நண்பன் விஸ்வநாதன்(21) என்பவருடன் சேர்ந்து வீட்டின் பின்புறம் மது அருந்தியுள்ளார்.

ராகவி, மணிமாறனை வீட்டிற்கு அழைத்தும் அவர் வரவில்லை. மறுநாள் காலை ராகவி வீட்டைவிட்டு வெளியில் வந்துபார்த்த போது மணிமாறன் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார். உடனே ராகவி அருகில் இருந்த விஸ்வநாதன் மற்றும் ஊர் மக்கள் உதவியுடன் உடலை இறக்கினார். பொங்கல் விழா நாட்களாக இருந்ததால் அவசரமாக மணிமாறனின் உடலை உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் அளிக்காமல் அடக்கம் செய்தனர்.

தரங்கம்பாடி

இந்நிலையில், விஸ்வநாதன் நேற்று எருக்கட்டாஞ்சேரி கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று மணிமாறனை குடிபோதையில் அடித்து கொன்றுவிட்டதாக வாக்குமூலம் கொடுத்து சரணடைந்துள்ளார். உடனே கிராம நிர்வாக அலுவலர் பொறையாறு காவல்துறையினரிடம் விஸ்வநாதனை ஒப்படைத்தார். அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரிக்கையில் மனசாட்சி உறுத்தியதால் சரணடைந்தேன் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பழிக்கு பழி தீர்த்த தொடர் படுகொலைகள்! நால்வர் கைது!

நாகை மாவட்டம் தரங்கம்பாடி பொறையாறு ஒழுகைமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர்கள் மணிமாறன்(26) ராகவி தம்பதி. மணிமாறனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி இரவு மணிமாறன் பழனியில் இருந்து வந்த அவரது நண்பன் விஸ்வநாதன்(21) என்பவருடன் சேர்ந்து வீட்டின் பின்புறம் மது அருந்தியுள்ளார்.

ராகவி, மணிமாறனை வீட்டிற்கு அழைத்தும் அவர் வரவில்லை. மறுநாள் காலை ராகவி வீட்டைவிட்டு வெளியில் வந்துபார்த்த போது மணிமாறன் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார். உடனே ராகவி அருகில் இருந்த விஸ்வநாதன் மற்றும் ஊர் மக்கள் உதவியுடன் உடலை இறக்கினார். பொங்கல் விழா நாட்களாக இருந்ததால் அவசரமாக மணிமாறனின் உடலை உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் அளிக்காமல் அடக்கம் செய்தனர்.

தரங்கம்பாடி

இந்நிலையில், விஸ்வநாதன் நேற்று எருக்கட்டாஞ்சேரி கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று மணிமாறனை குடிபோதையில் அடித்து கொன்றுவிட்டதாக வாக்குமூலம் கொடுத்து சரணடைந்துள்ளார். உடனே கிராம நிர்வாக அலுவலர் பொறையாறு காவல்துறையினரிடம் விஸ்வநாதனை ஒப்படைத்தார். அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரிக்கையில் மனசாட்சி உறுத்தியதால் சரணடைந்தேன் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பழிக்கு பழி தீர்த்த தொடர் படுகொலைகள்! நால்வர் கைது!

Intro:தரங்கம்பாடி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர் உடல் போலீசுக்கு தெரியாமல் அடக்கம். கொலை செய்தவர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண். மதுபோதையில் ஏற்பட்ட தகராரில் கொலை செய்ததாக வாக்குமூலம்:-Body:நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாறு காவல் சரகம் ஒழுகைமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் மகன் மணிமாறன்(26) கொத்தனார். இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் அரசு பேருந்து டிரைவர் ராஜேந்திரன் மகளான பிஇ படித்த ராகவியை காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தந்தை இறந்துவிட்ட நிலையில் மணிமாறன், தாய் அகிலாண்டேஸ்வரி, மனைவி ராகவி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்துள்ளார். மணிமாறனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சில மாதங்கள் மணிமாறன் குடிப்பதை விட்டிருந்தார். கடந்த ஜனவரி 1ம் தேதி மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் ராகவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த மணிமாறன் மீண்டும் குடிக்க தொடங்கியதுடன், ராஜேந்திரன் வீட்டுக்கு சென்று சத்தம் போட்டு மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி பழனியில் கொத்தனார் வேலை பார்க்கும் விஸ்வநாதன்(21) என்பவர் பொங்கலுக்காக சொந்த ஊரான எருக்கட்டாஞ்சேரி, கொட்டுபாளையத்திற்கு வந்துள்ளார். வழியில் பொறையாரில் அவரது நண்பர் மணிமாறனை சந்தித்துள்ளார். இருவரும் மணிமாறன் வீட்டு கொல்லையிலேயே அன்று விடிய விடிய மது குடித்துள்ளனர். அதனை ராகவி கண்டித்தும் கேட்கவில்லை. அதனையடுத்து அவர் படுத்து உறங்கிவிட்டார். தொடர்ந்து பொங்கல் அன்று விடியற்காலை எழுந்து பார்த்தபோது கழிவறையின் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி மணிமாறன் இறந்திருந்தது. தெரியவந்தது. அதையடுத்து அருகில் சற்று தூரத்தில் அமர்ந்திருந்த விஸ்வநாதனை அழைத்துவந்து இருவரும் சேர்ந்து மணிமாறன் உடலை இறக்கியுள்ளனர். பொங்கல் நாளாக இருந்ததால் அவசரம், அவசரமாக மணிமாறனின் உடலை உறவினர்கள் பொறையார் போலீசுக்கு தகவல் அளிக்காமல் தகனம் செய்துள்ளனர்.; இதனையடுத்து பழனிக்கு சென்ற விஸ்வநாதன் நேற்று எருக்கட்டாஞ்சேரி கிராம நிர்வாக அலுவலர் திலக்ராஜிடம் சரணடைந்தார். அப்போது போகியன்று இரவு மது போதையில் ஏற்பட்ட தகராறில் மணிமாறனை பாட்டிலால் அடித்துக்கொன்று, மரத்தில் தூக்கில் தொங்கவிட்டேன். தன்மீது சந்தேகம் வராமல் இருக்க காலை வரை அங்கேயே இருந்து விட்டு ராகவியுடன் சேர்ந்து மணிமாறனின் உடலை இறக்கி வைத்ததாகவும், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது மனசாட்சி உறுத்தியதால் தங்களிடம் சரணடைய வந்தேன் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொறையாறு போலீசாரிடம் விஸ்வநாதனை ஒப்படைத்த கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்குப் பதிந்து மணிமாறனை கைது செய்தனர். தொடர்ந்து இந்த கொலையை இவர் மட்டுமே செய்தாரா? வேறு நபர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.