ETV Bharat / state

தருமபுரம் ஆதீன மடாதிபதியின் திருமேனி நல்லடக்கம்

நாகை: தருமபுரம் ஆதீன மடாதிபதியின் திருமேனி நல்லடக்கம் செய்யப்பட்டது.

author img

By

Published : Dec 6, 2019, 7:51 AM IST

dead
dead

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 26ஆவது மடாதிபதி, குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள், உடல் நலக்குறைவால் முக்தியடைந்தார். அவரது திருமேனி, பக்தர்கள் அஞ்சலிக்காக தருமபுரம் ஆதீன வளாகத்தில் வைக்கப்பட்டது.

இதனைடுத்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், செங்கோல் ஆதீனம், புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

தருமபுரம் ஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்

இதனைத்தொடர்ந்து அவரது திருமேனிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பின்னர் பல்லக்கில் வைத்து நான்கு வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. பின் ஆதீனத்தில் உள்ள ஆதின குருமூர்த்த நந்தவனத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் மதுரை, திருப்பனந்தாள், ரத்தினகிரி, வேளாக்குறிச்சி, செங்கோல், திருவாவடுதுறை, குன்றக்குடி ஆகிய ஆதீனங்களின் மடாதிபதிகள், கட்டளைத் தம்பிரான் சுவாமிகள், கௌமார மடம், வீரசைவ மடம், மயிலம், பொம்மபுரம், மடாதிபதிகள் கோவை காமாட்சிபுரி ஆதீன மடாதிபதி, நீதிபதிகள் இந்து அறநிலைய ஆட்சித் துறை அலுவலர்கள் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 26ஆவது மடாதிபதி, குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள், உடல் நலக்குறைவால் முக்தியடைந்தார். அவரது திருமேனி, பக்தர்கள் அஞ்சலிக்காக தருமபுரம் ஆதீன வளாகத்தில் வைக்கப்பட்டது.

இதனைடுத்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், செங்கோல் ஆதீனம், புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

தருமபுரம் ஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம்

இதனைத்தொடர்ந்து அவரது திருமேனிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பின்னர் பல்லக்கில் வைத்து நான்கு வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. பின் ஆதீனத்தில் உள்ள ஆதின குருமூர்த்த நந்தவனத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் மதுரை, திருப்பனந்தாள், ரத்தினகிரி, வேளாக்குறிச்சி, செங்கோல், திருவாவடுதுறை, குன்றக்குடி ஆகிய ஆதீனங்களின் மடாதிபதிகள், கட்டளைத் தம்பிரான் சுவாமிகள், கௌமார மடம், வீரசைவ மடம், மயிலம், பொம்மபுரம், மடாதிபதிகள் கோவை காமாட்சிபுரி ஆதீன மடாதிபதி, நீதிபதிகள் இந்து அறநிலைய ஆட்சித் துறை அலுவலர்கள் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Intro:தருமபுரம் ஆதீன மடாதிபதியின் திருமேணி நல்லடக்கம் ஆதீனங்கள், பக்தர்கள் அஞ்சலி:-Body:இந்தியாவின் பழமையான சைவ ஆதினங்களில் ஒன்றான நாகை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் அமைந்துள்ளது ஆதீனத்தின் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முக்தியடைந்தார் அவரது திருமேனி ஆதீன மடத்தில் பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது ஏராளமான பொது மக்கள் கண்ணீருடன் திருமேனி முன் விழுந்து வணங்கி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இன்று மாலை அவரது திருமேனிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பின்னர் பல்லக்கில் வைத்து நான்கு வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. ஆதீனத்தில் உள்ள ஆதின குருமூர்த்த நந்தவனத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் மதுரை, திருப்பனந்தாள், ரத்தினகிரி, வேளாக்குறிச்சி, செங்கோல், திருவாவடுதுறை, குன்றக்குடி ஆகிய ஆதீனங்களின் மடாதிபதிகள் கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் கௌமார மடம், வீர சைவ மடம், மயிலம், பொம்மபுரம், மடாதிபதிகள் கோவைகாமாட்சிபுரி ஆதீன மடாதிபதி, நீதிபதிகள் இந்து அறநிலைய ஆட்சித் துறை அதிகாரிகள் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.