ETV Bharat / state

பழைய இரும்புக்கடையில் குவிக்கப்பட்டிருந்த பாடநூல்கள்! அதிகாரிகள் அதிர்ச்சி!

author img

By

Published : Dec 28, 2020, 7:59 PM IST

மயிலாடுதுறை: பழைய இரும்புக்கடையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் மூட்டை மூட்டையாக கட்டி குவித்து வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

books
books

மயிலாடுதுறை முத்து வக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவர் பழைய இரும்புக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு இன்று சென்ற மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் மகாராணி தலைமையிலான அதிகாரிகள், அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில், 2019-20 ஆம் கல்வி ஆண்டுக்கான ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்கள், பண்டல் பண்டலாக கட்டி குவிக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து பெருமாள்சாமியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததன் அடிப்படையில், மயிலாடுதுறை கிட்டப்பா மேல்நிலைப்பள்ளியில் உள்ள புத்தகக் கிடங்கில் பணியாற்றும் மேகநாதன் என்பவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி விலையில்லாமல் வழங்கும் நடப்பு கல்வியாண்டுக்கான புத்தகங்கள் பழைய இரும்புக்கடையில் மலை போல் குவிக்கப்பட்டிருந்தது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பழைய இரும்புக்கடையில் குவிக்கப்பட்டிருந்த பாடநூல்கள்! அதிகாரிகள் அதிர்ச்சி!

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிகழ்வு மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு தருவது யார் அரசா, அதிமுகவா... குழம்பும் பொதுமக்கள்

மயிலாடுதுறை முத்து வக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவர் பழைய இரும்புக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு இன்று சென்ற மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் மகாராணி தலைமையிலான அதிகாரிகள், அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில், 2019-20 ஆம் கல்வி ஆண்டுக்கான ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்கள், பண்டல் பண்டலாக கட்டி குவிக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து பெருமாள்சாமியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததன் அடிப்படையில், மயிலாடுதுறை கிட்டப்பா மேல்நிலைப்பள்ளியில் உள்ள புத்தகக் கிடங்கில் பணியாற்றும் மேகநாதன் என்பவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி விலையில்லாமல் வழங்கும் நடப்பு கல்வியாண்டுக்கான புத்தகங்கள் பழைய இரும்புக்கடையில் மலை போல் குவிக்கப்பட்டிருந்தது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பழைய இரும்புக்கடையில் குவிக்கப்பட்டிருந்த பாடநூல்கள்! அதிகாரிகள் அதிர்ச்சி!

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிகழ்வு மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு தருவது யார் அரசா, அதிமுகவா... குழம்பும் பொதுமக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.