ETV Bharat / state

சிறுமியை காவு வாங்கிய மர்ம காய்ச்சல்: அரசு மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு - Indictment on Naga Sirkazhi Government Hospital

நாகை: மர்ம காய்ச்சல் காரணமாக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று வயது சிறுமி போதிய சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

child dies at Nagai Sirkazhi Government Hospital, அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்காததால் சிறுமி உயிரிழப்பு என குற்றச்சாட்டு
author img

By

Published : Nov 5, 2019, 8:58 AM IST


நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழைய மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மூன்று வயது மகள் ஹரிணி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்துவந்தார். சிறுமிக்கு ஏற்பட்ட மர்ம காய்ச்சலால் இரண்டு நாள்களாக சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

child dies at Nagai Sirkazhi Government Hospital, அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்காததால் சிறுமி உயிரிழப்பு

இது குறித்து சிறுமியின் உறவினர்கள் கூறுகையில், ஹரிணியை மருத்துவமனையில் அனுமதித்திருந்த இரண்டு நாள்களாக குழந்தை மருத்துவர் சிகிச்சை அளிக்க வரவில்லை. செவிலி மட்டுமே சிகிச்சை அளித்ததால் ஹரிணி மருத்துவமனையிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

மேலும், உயிரிழந்த குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனையில் அமரர் வாகனம்கூட இல்லை என வருத்தம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் துணிப்பையில் கிடந்த குழந்தை!


நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழைய மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மூன்று வயது மகள் ஹரிணி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்துவந்தார். சிறுமிக்கு ஏற்பட்ட மர்ம காய்ச்சலால் இரண்டு நாள்களாக சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

child dies at Nagai Sirkazhi Government Hospital, அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்காததால் சிறுமி உயிரிழப்பு

இது குறித்து சிறுமியின் உறவினர்கள் கூறுகையில், ஹரிணியை மருத்துவமனையில் அனுமதித்திருந்த இரண்டு நாள்களாக குழந்தை மருத்துவர் சிகிச்சை அளிக்க வரவில்லை. செவிலி மட்டுமே சிகிச்சை அளித்ததால் ஹரிணி மருத்துவமனையிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

மேலும், உயிரிழந்த குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனையில் அமரர் வாகனம்கூட இல்லை என வருத்தம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் துணிப்பையில் கிடந்த குழந்தை!

Intro:சீர்காழி அருகே மர்ம காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி உயிரிழப்பு அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு:
Body:நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழைய மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஹரிணி மூன்று வயது இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். ஹரிணிக்கு காய்ச்சல் ஏற்பட்டு கடந்த இரண்டு நாட்களாக சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இரண்டு நாட்களாக ஹரிணிக்கு குழந்தை மருத்துவர் சிகிச்சை அளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருத்துவர்கள் யாரும் சரிவர சிகிச்சை அளிக்க வரவில்லை. செவிலியர் மட்டுமே சிகிச்சை அளித்ததால் திங்கட்கிழமை ஹரிணி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். போதிய சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவமனை அலட்சியம் செய்ததால் ஹரிணி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் ஹரிணிக்கு என்ன காய்ச்சல் என்று கூறாமல் இரண்டு நாட்களாக என்ன மருத்துவம் அளிக்கப் பட்டது என்பதையும் தெரிவிக்காமல் நோட்டு பேப்பரை கிழித்து அதில் சீல் வைத்து குழந்தை உயிரிழந்ததாக மருத்துவமனை மருத்துவர் சான்று அளித்துள்ளார். இறந்த குழந்தையை வீட்டிற்கு எடுத்து செல்ல கூட மருத்துவமனையில் அமரர் வாகனம் தரமால் தனியார் வாகனத்தை வாடகைக்கு பிரேதத்தை எடுத்து வந்துள்ளனர்.மேலூம் பழையார் பகுதியில் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் மருத்துவகுழுக்களை அமைத்து சிகிச்சை அளிக்க கோரிக்கை.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.