ETV Bharat / state

தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Feb 20, 2022, 6:24 PM IST

சீர்காழி அருகே தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 2 பேர் பலி
தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 2 பேர் பலி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் அலி உசேன். இவருக்குத் தொடுவாய் கிராமத்தில் மீனிலிருந்து எண்ணெய் மற்றும் பவுடர் தயாரிக்கும் (பிஸ்மி) தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலையில் இன்று (பிப்ரவரி 20) மதியம் 1 மணியளவில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்தது. இதில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அருண்ஓரானா, பல்ஜித்ஓரான் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 2 பேர் பலி

படுகாயமடைந்த பாய்லர் ஆபரேட்டர் உச்சிமேடு ரகுபதி (53), பந்தநல்லூர் மாரிதாஸ்(45), திருமுல்லைவாசல் ஜாவித்(29) ஆகிய மூன்று பேரையும் சக ஊழியர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் ரகுபதி மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பாய்லர் விபத்து குறித்து சீர்காழி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓட்டுநர் மீது தாக்குதல்?

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் அலி உசேன். இவருக்குத் தொடுவாய் கிராமத்தில் மீனிலிருந்து எண்ணெய் மற்றும் பவுடர் தயாரிக்கும் (பிஸ்மி) தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலையில் இன்று (பிப்ரவரி 20) மதியம் 1 மணியளவில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்தது. இதில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அருண்ஓரானா, பல்ஜித்ஓரான் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 2 பேர் பலி

படுகாயமடைந்த பாய்லர் ஆபரேட்டர் உச்சிமேடு ரகுபதி (53), பந்தநல்லூர் மாரிதாஸ்(45), திருமுல்லைவாசல் ஜாவித்(29) ஆகிய மூன்று பேரையும் சக ஊழியர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் ரகுபதி மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பாய்லர் விபத்து குறித்து சீர்காழி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓட்டுநர் மீது தாக்குதல்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.