ETV Bharat / state

மீண்டும் துளிர்க்க வேண்டும் எங்கள் சந்ததி.... கிராம மக்களின் தரமான சம்பவம்..! - ஆலமரத்திற்கு மீண்டும் உயிர்தந்த மக்கள்

நாகை: கஜா புயலில் வேரோடு சாய்ந்த 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்திற்கு கிராம மக்கள் மறுவாழ்வு அளித்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் வேதாரண்யம் அருகே நடந்துள்ளது.

banyan
author img

By

Published : Aug 16, 2019, 12:39 PM IST

நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின் கோரதாண்டவத்தில், லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவற்றை அப்புறப்படுத்தவதற்கே பல மாதங்கள் நீடித்தன.

இந்தச் சூழலில், நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மறைஞாயநல்லூர் பகுதியில் அமைந்துள்ள துரோபதி அம்மன் கோயிலில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தை கிராம மக்களால் தெய்வமாக நினைத்து வழிபாடு நடத்தி வந்தனர்.

நாகை
மரத்திற்கு மறுவாழ்வு தந்த மக்கள்
இந்நிலையில் இந்த மரமானது கஜா புயலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் வேருடன் சாய்ந்தது. இதனால் மனவேதனை அடைந்த அப்பகுதி மக்கள் இம்மரத்திற்கு மீண்டும் உயிர் உண்டாக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இறுதியாக ஊர்மக்களின் உதவியுடன் ஒன்பது மாதங்களாக சாய்ந்த நிலையில் இருந்த மரத்தினை ஜேசிபி, பொக்லைன் உதவியுடன் தற்போது நட்டு வைத்துள்ளனர்.
நாகை
வேரோடு சாய்ந்த ஆலமரம் மீண்டும் நட்டு வைக்கப்பட்டது
மேலும் அப்பகுதியில் தண்ணீர் பிரச்னை உள்ளதால், மரத்திற்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டுவந்து விடப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த மரம் எங்களின் இறைவழிபாட்டு மரம் ஆகும். இது இப்படி சாய்ந்த நிலையில் இருந்தது மனவேதனையை அளித்தது. இது மீண்டும் பழைய படி விழுதுகள் விட்டு எங்களின் சந்ததியினர் அதில் ஊஞ்சல் விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் நட்டுவைத்துள்ளோம் என்றனர்.
வேரோடு சாய்ந்த ஆலமரத்திற்கு மறுவாழ்வு
நல்ல நிலையில் இருக்கும் பல மரங்களை வெட்டி விற்பனை செய்து பணம் ஈட்ட நினைக்கும் பலரது மத்தியில், சாய்ந்த மரத்தினை பல ஆயிரம் செலவு செய்து மீண்டும் அதனை உயிர் பெற வைத்துள்ள கிராம மக்களின் மனிதாபிமானத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.

நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின் கோரதாண்டவத்தில், லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவற்றை அப்புறப்படுத்தவதற்கே பல மாதங்கள் நீடித்தன.

இந்தச் சூழலில், நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மறைஞாயநல்லூர் பகுதியில் அமைந்துள்ள துரோபதி அம்மன் கோயிலில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தை கிராம மக்களால் தெய்வமாக நினைத்து வழிபாடு நடத்தி வந்தனர்.

நாகை
மரத்திற்கு மறுவாழ்வு தந்த மக்கள்
இந்நிலையில் இந்த மரமானது கஜா புயலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் வேருடன் சாய்ந்தது. இதனால் மனவேதனை அடைந்த அப்பகுதி மக்கள் இம்மரத்திற்கு மீண்டும் உயிர் உண்டாக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இறுதியாக ஊர்மக்களின் உதவியுடன் ஒன்பது மாதங்களாக சாய்ந்த நிலையில் இருந்த மரத்தினை ஜேசிபி, பொக்லைன் உதவியுடன் தற்போது நட்டு வைத்துள்ளனர்.
நாகை
வேரோடு சாய்ந்த ஆலமரம் மீண்டும் நட்டு வைக்கப்பட்டது
மேலும் அப்பகுதியில் தண்ணீர் பிரச்னை உள்ளதால், மரத்திற்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டுவந்து விடப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த மரம் எங்களின் இறைவழிபாட்டு மரம் ஆகும். இது இப்படி சாய்ந்த நிலையில் இருந்தது மனவேதனையை அளித்தது. இது மீண்டும் பழைய படி விழுதுகள் விட்டு எங்களின் சந்ததியினர் அதில் ஊஞ்சல் விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் நட்டுவைத்துள்ளோம் என்றனர்.
வேரோடு சாய்ந்த ஆலமரத்திற்கு மறுவாழ்வு
நல்ல நிலையில் இருக்கும் பல மரங்களை வெட்டி விற்பனை செய்து பணம் ஈட்ட நினைக்கும் பலரது மத்தியில், சாய்ந்த மரத்தினை பல ஆயிரம் செலவு செய்து மீண்டும் அதனை உயிர் பெற வைத்துள்ள கிராம மக்களின் மனிதாபிமானத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.
Intro:மரத்திற்கு மறுவாழ்வு கொடுத்த கிராம மக்கள்.


Body:மரத்திற்கு மறுவாழ்வு கொடுத்த கிராம மக்கள்.


கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின் கோரதாண்டவத்தில், லட்சக்கணக்கான மரங்கள் நாகை மாவட்டத்தில் வேரோடு சாய்ந்தன. அவற்றை அப்புறப்படுத்தவே பல மாதங்கள் நீடித்தன.

இந்த சூழலில், நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த மறைஞாயநல்லூர் பகுதியை சேர்ந்த உச்சக்கட்ட கட்டளை என்ற இடத்தில் அமைந்துள்ள துரோபதி அம்மன் ஆலயத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் ஒன்று கிராம மக்களால் கோவில் மரமாக பாவித்து வழிபாடு நடத்தி வந்துள்ளனர்.

இந்த மரமானது கஜா புயலின் காற்றை சமாளிக்க முடியாது வேருடன் சாய்ந்தது, இதனால் மனவேதனை அடைந்த அப்பகுதி மக்கள் இம் மரத்தினை மீண்டும் உயிர் உண்டாக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இறுதியாக ஊர்மக்களின் உதவியுடன் சாய்ந்து, ஒன்பது மாதங்களாக தரையில் படுத்தவாறு பிழைக்க வழியின்றி தவித்த மரத்தினை ஜேசிபி இயந்திரம் மற்றும் பொக்லைன் இயந்திர உதவியுடன் பல ஆயிரம் செலவு செய்து பல அடி ஆழம் குழி தோண்டி மரத்தினை நிமிர்த்து தற்போது நட்டு வைத்துள்ளன.

அப்பகுதியில் தண்ணீர் பிரச்சினை என்பதால் அதற்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டுவந்து நிரப்பும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த 9 மாதங்களாக சாய்ந்து கிடந்த மரத்தின் கிளைகளை அகற்றி தற்போது அதன் அடி மரத்தினை நட்பு வைத்துள்ளதாக கூறும் அப்பகுதி மக்கள் இந்த மரம் எங்களின் இறைவழிபாட்டு மரம் என்றும், இது மீண்டும் பழைய படி விழுதுகள் விட்டு எங்களின் சந்ததியினர் விழுதுகளின் ஊஞ்சல் விளையாடுவார்கள் என்றும் மகிழ்ச்சியுடன் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நல்ல நிலையில் இருக்கும் பல மரங்களை வெட்டி விற்பனை செய்து பணம் ஈட்ட நினைக்கும் பலரது மத்தியில் சாய்ந்த மரத்தினை பல ஆயிரம் செலவு செய்து மீண்டும் அதனை உயிர் பெற்றுள்ள சம்பவம் அவர்களின் மனிதாபிமானத்தை பலரது மத்தியில் பாராட்டுகளை பெற்றுத் தந்துள்ளது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.