ETV Bharat / state

போலீஸ் பாதுகாப்புடன் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படம்

author img

By

Published : Mar 10, 2022, 12:25 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல் துறை பாதுகாப்புடன் திரையிடப்பட்டது.

போலீஸ் பாதுகாப்புடன் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படம்
போலீஸ் பாதுகாப்புடன் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படம்

நாகப்பட்டினம்: நடிகர் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு ஓடிடியில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரிப்பதாக பாமக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மயிலாடுதுறை மாவட்டம் பாமக சார்பில் சூர்யாவை தாக்குபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர். மேலும், சூர்யா நடிப்பில் வெளிவரும் புதிய படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியிருந்தனர்.

இந்நிலையில் இன்று (மார்ச் 10) சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளிவந்தது. இந்த திரைப்படத்தை திரையிடக்கூடாது என பல்வேறு மாவட்டங்களில் பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் தமிழ்நாடு முழுவதும் படம் திரையிடப்பட்டது.

போலீஸ் பாதுகாப்புடன் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படம்
போலீஸ் பாதுகாப்புடன் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படம்

மயிலாடுதுறை மாவட்டம் விஜயா திரையரங்கில் காலை 10:30 மணிக்கு ‘எதற்கும் துணிந்தவன்’ படம் திரையிடப்பட்டது. திரையரங்கு வெளியே காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், படத்திற்கு வரும் ரசிகர்களுக்கு செடிகள் வழங்கப்பட்டன.

போலீஸ் பாதுகாப்புடன் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படம்
போலீஸ் பாதுகாப்புடன் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படம்

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்தப் படம் என்னவாயிருக்கும்?

நாகப்பட்டினம்: நடிகர் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு ஓடிடியில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரிப்பதாக பாமக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மயிலாடுதுறை மாவட்டம் பாமக சார்பில் சூர்யாவை தாக்குபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர். மேலும், சூர்யா நடிப்பில் வெளிவரும் புதிய படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியிருந்தனர்.

இந்நிலையில் இன்று (மார்ச் 10) சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளிவந்தது. இந்த திரைப்படத்தை திரையிடக்கூடாது என பல்வேறு மாவட்டங்களில் பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் தமிழ்நாடு முழுவதும் படம் திரையிடப்பட்டது.

போலீஸ் பாதுகாப்புடன் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படம்
போலீஸ் பாதுகாப்புடன் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படம்

மயிலாடுதுறை மாவட்டம் விஜயா திரையரங்கில் காலை 10:30 மணிக்கு ‘எதற்கும் துணிந்தவன்’ படம் திரையிடப்பட்டது. திரையரங்கு வெளியே காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், படத்திற்கு வரும் ரசிகர்களுக்கு செடிகள் வழங்கப்பட்டன.

போலீஸ் பாதுகாப்புடன் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படம்
போலீஸ் பாதுகாப்புடன் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படம்

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்தப் படம் என்னவாயிருக்கும்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.