ETV Bharat / state

அதிமுகவின் மாவட்ட செயலாளர் பதவிக்கு 5 பேர் வேட்மனு தாக்கல் - எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட துணை செயலாளர் உள்ளிட்ட 9 பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிட அதிமுகவைச் சேர்ந்த ஐந்து பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்மனுத்தாக்கல்
வேட்மனுத்தாக்கல்
author img

By

Published : Apr 25, 2022, 11:01 PM IST

சென்னை: அதிமுக கழக அமைப்புக்கான தேர்தல் மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி, தரங்கம்பாடி தாலுகா ஆக்கூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஏப்.25) நடைபெற்றது. இதில் விருப்பமனு பெரும் நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான சொரத்தூர் ராஜேந்திரன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராயபுரம் மனோ, அண்ணா தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளர் கோ.சூரியமூர்த்தி ஆகியோர் விருப்ப மனுக்களைப் பெற்றனர்.

இதில் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், தற்போதைய மாவட்ட செயலாளருமான எஸ். பவுன்ராஜ் மனுதாக்கல் செய்தார். மாவட்ட செயலாளர் பவுன்ராஜுக்கு ஆதரவாக எட்டு பேர் விருப்பமனு அளித்துள்ளனர். இதேபோல், மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரங்கநாதன், நடராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் ஒன்றாக சேர்ந்து பேரணியாக வந்து மனுதாக்கல் செய்தனர்.

மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல்

ஒன்பது பதவியிடங்களுக்கு 38 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆகியோர் இருவருமே தங்களது ஆதரவாளர்களுடன் இரண்டு அணியாக வந்து மனுதாக்கல் செய்தது அதிமுக கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு எதிரான வழக்கு: அதிமுக பதில் மனு தாக்கல்

சென்னை: அதிமுக கழக அமைப்புக்கான தேர்தல் மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி, தரங்கம்பாடி தாலுகா ஆக்கூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஏப்.25) நடைபெற்றது. இதில் விருப்பமனு பெரும் நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான சொரத்தூர் ராஜேந்திரன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராயபுரம் மனோ, அண்ணா தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளர் கோ.சூரியமூர்த்தி ஆகியோர் விருப்ப மனுக்களைப் பெற்றனர்.

இதில் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், தற்போதைய மாவட்ட செயலாளருமான எஸ். பவுன்ராஜ் மனுதாக்கல் செய்தார். மாவட்ட செயலாளர் பவுன்ராஜுக்கு ஆதரவாக எட்டு பேர் விருப்பமனு அளித்துள்ளனர். இதேபோல், மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரங்கநாதன், நடராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் ஒன்றாக சேர்ந்து பேரணியாக வந்து மனுதாக்கல் செய்தனர்.

மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல்

ஒன்பது பதவியிடங்களுக்கு 38 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆகியோர் இருவருமே தங்களது ஆதரவாளர்களுடன் இரண்டு அணியாக வந்து மனுதாக்கல் செய்தது அதிமுக கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு எதிரான வழக்கு: அதிமுக பதில் மனு தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.