ETV Bharat / state

1,872 மதுபாட்டில்கள், 120 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் - இருவர் கைது - மயிலாடுதுறையில் 1872 மதுபாட்டில், 120 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

நாகை: மயிலாடுதுறை அருகே காரைக்காலிலிருந்து கடத்தி வரப்பட்ட 1,872 மதுபாட்டில்களும் 120 லிட்டர் எரிசாராயத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

liquor bottle
author img

By

Published : Sep 27, 2019, 11:03 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது சாக்கு மூட்டை, அட்டைப் பெட்டிகளில் 1,872 மதுபாட்டில்கள் மற்றும் 120 லிட்டர் எரிசாராயம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மதுபாட்டில்கள், சாராயம், காரை பறிமுதல் செய்து, ஆக்கூரை சேர்ந்த கார் ஓட்டுநர் சங்கர், உடனிருந்த கனி ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

விசாரணையில், விற்பனைக்காக காரைக்காலிலிருந்து கும்பகோணத்திற்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. மேலும், ஆக்கூரை சேர்ந்த பாபுராஜ் என்பவருக்காக கடத்தி சென்றதாகவும் கைதானவர்கள் கூறினர். இதற்கிடையே, பாபுராஜ் அண்ணன் ராஜூ என்பவர் தொடர்ந்து சாராய கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் அனைவரும் சாராய கடத்தலில் ஈடுபடுவதால் காவல் துறையினர் கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடத்திவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது சாக்கு மூட்டை, அட்டைப் பெட்டிகளில் 1,872 மதுபாட்டில்கள் மற்றும் 120 லிட்டர் எரிசாராயம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மதுபாட்டில்கள், சாராயம், காரை பறிமுதல் செய்து, ஆக்கூரை சேர்ந்த கார் ஓட்டுநர் சங்கர், உடனிருந்த கனி ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

விசாரணையில், விற்பனைக்காக காரைக்காலிலிருந்து கும்பகோணத்திற்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. மேலும், ஆக்கூரை சேர்ந்த பாபுராஜ் என்பவருக்காக கடத்தி சென்றதாகவும் கைதானவர்கள் கூறினர். இதற்கிடையே, பாபுராஜ் அண்ணன் ராஜூ என்பவர் தொடர்ந்து சாராய கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் அனைவரும் சாராய கடத்தலில் ஈடுபடுவதால் காவல் துறையினர் கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடத்திவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:மயிலாடுதுறை அருகே காரைக்காலிலிருந்து கடத்திவரப்பட்ட 1872 மதுபாட்டில்கள் 120 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் இருவர் கைது:-Body:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சென்னியநல்லூர்; மெயின்ரோட்டில்; மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில்; சாக்குமூட்டை மற்றும் அட்டைப்பெட்டிகளில் 1872 குவாட்டர் மதுபாட்டில்கள் மற்றும் 120 லிட்டர் எரிசாராயம் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் மதுபாட்டில்கள் சாராயம் மற்றும ;கடத்தலுக்குப் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். ஆக்கூரை சேர்ந்த கார் ஓட்டுநர் சங்கர், சேத்திராபாலபுரம் பகுதியை சேர்ந்த கனி ஆகிய இருவரை கைது செய்து விசாரணை செய்ததில் விற்பனைக்காக காரைக்காலிலிருந்து கும்பகோணம் கடத்தி சென்றது தெரிய வந்தது. ஆக்கூரை சேர்ந்த பாபுராஜ் என்பவருக்காக கடத்தி சென்றதாக கூறினர். பாபுராஜ் அண்ணன் ராஜீ என்பவர் தொடர்ந்து சாராய கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் ராஜீயை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்துள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சாராய கடத்தலில் ஈடுபடுவதால் போலீசார் கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.