மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் 16ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சென்னை நாட்டியக்கூடம் குழுவினர், ஸ்ரீ ந்ருத்யாலயா அகாதமி குழுவினர், மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் நுண்கலைப் பயிற்சியகக் குழுவினர், சென்னை லட்சுமி கலாகேந்தரம் குழுவினர், ந்ருத்யாப்யாசா அகாதமி ஆஃப் பைன் ஆர்ட்ஸ் குழுவினர், நாட்டியதிருத் அகாதமி ஆஃப் பரதநாட்டியம் ஆகிய குழுவினரின் பரதநாட்டியம், நாட்டிய நாடகம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
இதில் மயிலை சப்தஸ்வரங்கள் நுண்கலைப் பயிற்சியக மாணவிகள் 50 நிமிடங்கள் நடத்திய மகாபாரத பரதநாட்டிய நாடக காவியம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இரண்டாம் நாள் மயூர நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்ற கலைஞர்களை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் ஏ.ஆர்.சி. விஸ்வநாதன், தலைவர் பரணிதரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் நினைவுப்பரிசு வழங்கிப் பாராட்டினர். இதில் கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: TODAY HOROSCOPE: பிப்ரவரி 28 ராசிபலன் - உங்க ராசி எப்படி?