ETV Bharat / state

வைகை ஆற்றில் இரண்டு நாள்களுக்குப்பின் மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்..!

author img

By

Published : Dec 16, 2019, 10:34 PM IST

மதுரை: வைகையாற்றில் அடித்துசெல்லப்பட்ட இளைஞரின் சடலம் இரண்டு நாள் தீவிர தேடுலுக்குப்பின் கடலில் முத்தெடுக்கும் இலங்கை அகதிகள் உதவியுடன் மீட்கப்பட்டது.

Young dead body rescue from vaigai river
Young dead body rescue from vaigai river

மதுரை மாவட்டம் மணிநகர் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் - மஞ்சுளா தம்பதியின் மகன் சங்கர் (17). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை, சங்கர் தனது நண்பர்களுடன் வைகை ஆற்றில் குளிக்கச் சென்றார்.

அப்போது, சங்கர் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைக் கண்ட அவரது நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. உடனடியாக அவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த 20ம் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கடந்த இரண்டு நாள்களாக சங்கர் தேடப்பட்ட நிலையில் இன்று, இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் கடலில் முத்தெடுக்கும் ஐந்து மீனவ இளைஞர்கள் சங்கரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இளைஞரின் சடலத்தை மீட்கும் தீயணைப்பு வீரர்கள்

அந்த இளைஞர்கள் தேடுதல் பணியில் ஈடுப்பட்ட சில நிமிடங்களிலயே துரிதமாக செயல்பட்டு செல்லூர் பாலத்தின் கீழ் உயிரிழந்த நிலையில் சங்கரின் சடலத்தை மீட்டனர். தற்போது வைகை ஆற்றில் வெள்ளநீர் அதிகரித்து செல்வதால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் பல்வேறு எச்சரிக்கைகள் விடுத்தும் பொதுமக்கள் அலட்சியமாக இருப்பதே இதுபோன்ற தொடர் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

தூங்கும்போது தலையில் கல்லைப்போட்டு கொலை - ஒருவருக்கு வலைவீச்சு!

மதுரை மாவட்டம் மணிநகர் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் - மஞ்சுளா தம்பதியின் மகன் சங்கர் (17). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை, சங்கர் தனது நண்பர்களுடன் வைகை ஆற்றில் குளிக்கச் சென்றார்.

அப்போது, சங்கர் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைக் கண்ட அவரது நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. உடனடியாக அவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த 20ம் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கடந்த இரண்டு நாள்களாக சங்கர் தேடப்பட்ட நிலையில் இன்று, இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் கடலில் முத்தெடுக்கும் ஐந்து மீனவ இளைஞர்கள் சங்கரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இளைஞரின் சடலத்தை மீட்கும் தீயணைப்பு வீரர்கள்

அந்த இளைஞர்கள் தேடுதல் பணியில் ஈடுப்பட்ட சில நிமிடங்களிலயே துரிதமாக செயல்பட்டு செல்லூர் பாலத்தின் கீழ் உயிரிழந்த நிலையில் சங்கரின் சடலத்தை மீட்டனர். தற்போது வைகை ஆற்றில் வெள்ளநீர் அதிகரித்து செல்வதால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் பல்வேறு எச்சரிக்கைகள் விடுத்தும் பொதுமக்கள் அலட்சியமாக இருப்பதே இதுபோன்ற தொடர் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

தூங்கும்போது தலையில் கல்லைப்போட்டு கொலை - ஒருவருக்கு வலைவீச்சு!

Intro:*மதுரை வைகையாற்றில் நீரில் அடித்துசெல்லப்பட்ட இளைஞரின் சடலம் மீட்பு - உடலை மீட்டெடுக்க உதவிய இலங்கை அகதிகள்*Body:*மதுரை வைகையாற்றில் நீரில் அடித்துசெல்லப்பட்ட இளைஞரின் சடலம் மீட்பு - உடலை மீட்டெடுக்க உதவிய இலங்கை அகதிகள்*

மதுரை மணிநகர் பகுதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் - மஞ்சுளா தம்பதியரின் மகன் சங்கர்(17) தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார் இந்நிலையில் செல்லூர் பாலம் அருகே வைகை ஆற்றில் நேற்று காலை குளிக்கச் சென்ற போது சிறிது நேரம் கழித்து அவரை காணவில்லை இந்நிலையில் அருகில் இருந்த நண்பர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் சங்கரை தேடும் பணியில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் கடந்த 2நாட்களாக ஈடுபட்டனர் இந்நிலையில் தொடர்ந்து தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில் இன்று மதியத்திற்கு மேல் மதுரை ஆனையூர் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ள கடலில் மூழ்கி முத்தெடுக்கும் பணிகளில் ஈடுபட கூடிய 5மீனவ இளைஞர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில் சில நிமிடங்களிலயே துரிதமாக செயல்பட்டு செல்லூர் பாலத்தின் கீழ்புறத்திலயே இறந்த இளைஞரின் உடலை மீட்டெடுத்தனர்.

மதுரை வைகை ஆற்றில் தற்பொழுது வெள்ளமானது அதிகரித்து செல்லும் நிலையில் தொடர்ந்து உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது காவல்துறை தரப்பில் பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு பொது மக்கள் அலட்சியமாக இருப்பதால் இது போன்ற தொடர் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.