ETV Bharat / state

வேளாண் உற்பத்தியை அதிகரிக்க போதிய நிதி ஒதுக்கீடு அவசியம் - தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை

வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், சிறுதானிய விவசாயத்தை ஊக்குவிக்கவும் மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போதிய நிதி ஒதுக்கீட்டு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் முனைவர் ஜெகதீசன் கோரிக்கை வைத்துள்ளார்.

author img

By

Published : Jan 28, 2023, 6:33 AM IST

Etv Bharat
Etv Bharat

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2023 பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யும் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

இந்தியாவால் முன் வைக்கப்பட்டு 70-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையால் 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டு, உலக நாடுகளுடன் இந்தியாவும் கொண்டாடி வருகிறது. இது இந்திய நாகரிகத்தின் ஒரு பகுதியாக மற்றும் உலகளாவிய பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்யும் திறன் கொண்டது.

இந்தியாவில் சிறுதானிய உற்பத்தி 2015-16 ஆம் ஆண்டில் 14.52 மில்லியன் டன்னிலிருந்து 2020-21 ஆம் ஆண்டில் 18.02 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. உலகளாவிய சிறுதானிய சந்தை 2021 மற்றும் 2026 க்கு இடையில் CAGR (கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம்) 4.5 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டிலும், பிற நாடுகளிலும் உள்ள இளைய தலைமுறையினர் தற்போது ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உணவில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். சிறுதானியங்களில் ஏராளமான புரதம், நார்ச்சத்து, தாதுக்கள் உள்ளதால் இது ஒரு சூப்பர் உணவாக கருதப்படுகின்றது.

சிறுதானியங்களின் தேவை அதன் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக உலகளவில் மிகவும் அதிகரித்து வருகிறது, விவசாயிகளை ஊக்குவித்து, சிறுதானியங்களை அதிகளவில் சாகுபடி செய்திட ஏதுவாக, பயிர் பாதுகாப்பு பொருட்கள், வேளாண் உபகரணங்கள், விதைகள் மற்றும் பிற இடுபொருட்களுக்கு வரிச்சலுகை வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும். அதிகரித்து வரும் இடுபொருள் விலை, விவசாயிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.

அத்துடன் இயற்கை வேளாண்மை முறைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதோடு சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். சிறந்த உள்கட்டமைப்பு, பொது விநியோகத் திட்டக் கொள்முதல், பயிர்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தரக்கட்டுப்பாடு, மண் பரிசோதனை உள்பட விவசாயிகளின் இலாபத்தையும் அதிகரித்தல் போன்ற பல திட்டங்களை சிறுதானிய விவசாயிகள் மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கின்றனர். மத்திய பட்ஜெட் 2023-ல் வேளாண் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிபிசியின் மோடி ஆவணப்படம்: தடையை மீறி சென்னை பல்கலை. வளாகத்தில் பார்த்த மாணவர்கள்!

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2023 பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யும் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

இந்தியாவால் முன் வைக்கப்பட்டு 70-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையால் 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டு, உலக நாடுகளுடன் இந்தியாவும் கொண்டாடி வருகிறது. இது இந்திய நாகரிகத்தின் ஒரு பகுதியாக மற்றும் உலகளாவிய பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்யும் திறன் கொண்டது.

இந்தியாவில் சிறுதானிய உற்பத்தி 2015-16 ஆம் ஆண்டில் 14.52 மில்லியன் டன்னிலிருந்து 2020-21 ஆம் ஆண்டில் 18.02 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. உலகளாவிய சிறுதானிய சந்தை 2021 மற்றும் 2026 க்கு இடையில் CAGR (கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம்) 4.5 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டிலும், பிற நாடுகளிலும் உள்ள இளைய தலைமுறையினர் தற்போது ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உணவில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். சிறுதானியங்களில் ஏராளமான புரதம், நார்ச்சத்து, தாதுக்கள் உள்ளதால் இது ஒரு சூப்பர் உணவாக கருதப்படுகின்றது.

சிறுதானியங்களின் தேவை அதன் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக உலகளவில் மிகவும் அதிகரித்து வருகிறது, விவசாயிகளை ஊக்குவித்து, சிறுதானியங்களை அதிகளவில் சாகுபடி செய்திட ஏதுவாக, பயிர் பாதுகாப்பு பொருட்கள், வேளாண் உபகரணங்கள், விதைகள் மற்றும் பிற இடுபொருட்களுக்கு வரிச்சலுகை வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும். அதிகரித்து வரும் இடுபொருள் விலை, விவசாயிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.

அத்துடன் இயற்கை வேளாண்மை முறைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதோடு சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். சிறந்த உள்கட்டமைப்பு, பொது விநியோகத் திட்டக் கொள்முதல், பயிர்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தரக்கட்டுப்பாடு, மண் பரிசோதனை உள்பட விவசாயிகளின் இலாபத்தையும் அதிகரித்தல் போன்ற பல திட்டங்களை சிறுதானிய விவசாயிகள் மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கின்றனர். மத்திய பட்ஜெட் 2023-ல் வேளாண் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிபிசியின் மோடி ஆவணப்படம்: தடையை மீறி சென்னை பல்கலை. வளாகத்தில் பார்த்த மாணவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.