ETV Bharat / state

9 மாவட்டத்திற்கு மட்டும்தான் பொங்கல் பரிசாம்! - தேர்தல் ஆணையம்

மதுரை: தேர்தல் நடக்காத ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

TN Pongal Gift for only Nine districts, HC order
TN Pongal Gift for only Nine districts, HC order
author img

By

Published : Dec 19, 2019, 9:59 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார்கோட்டையைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்,

மனுவில், "தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகிற டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள நல்லமனார் கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.

இந்நிலையில் அதிமுகவினர் உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாடு அரசின் சார்பாக பொங்கல் பரிசு கொடுத்து தாங்கள் சொல்லும் நபருக்குத்தான் வாங்களிக்க வேண்டும் என மக்களிடம் பரப்புரை மேற்கொள்கின்றனர்.

மேலும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தனித்தனி வண்ணங்களில் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டாலும் அதை ஒரே பெட்டியில் போடுவதால் மக்களுக்கு குழப்பம் ஏற்படுவதுடன் வாக்குச் சீட்டுகளை பிரிப்பதில் நேரமும் விரயமாகிறது.

இதனால் தேர்தலில்போது வாக்களித்த சீட்டுகளை போடுவதற்கு தனித்தனி பெட்டிகளை வைக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு அரசு வழங்கிவரும் பொங்கல் பரிசுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று இரு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதும், தேர்தல் நடக்கக்கூடிய 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை. தேர்தல் நடைபெறாத ஒன்பது மாவட்டங்களில் மட்டுமே பொங்கல் பரிசு வழங்க அனுமதித்துள்ளதாகவும், தேர்தலின்போது வாக்களித்த வாக்குச்சீட்டுகளைப் போடுவதற்கு தனித்தனி பெட்டிகளை வைக்கக்கோரிய மனுவில் அடுத்த உள்ளாட்சித் தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தை அணுகக்கோரி வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க...SBI நகை மதிப்பீட்டாளருக்கான தொகை நிர்ணய அறிவிப்பிற்கு தடை!

திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார்கோட்டையைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்,

மனுவில், "தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகிற டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள நல்லமனார் கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.

இந்நிலையில் அதிமுகவினர் உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாடு அரசின் சார்பாக பொங்கல் பரிசு கொடுத்து தாங்கள் சொல்லும் நபருக்குத்தான் வாங்களிக்க வேண்டும் என மக்களிடம் பரப்புரை மேற்கொள்கின்றனர்.

மேலும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தனித்தனி வண்ணங்களில் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டாலும் அதை ஒரே பெட்டியில் போடுவதால் மக்களுக்கு குழப்பம் ஏற்படுவதுடன் வாக்குச் சீட்டுகளை பிரிப்பதில் நேரமும் விரயமாகிறது.

இதனால் தேர்தலில்போது வாக்களித்த சீட்டுகளை போடுவதற்கு தனித்தனி பெட்டிகளை வைக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு அரசு வழங்கிவரும் பொங்கல் பரிசுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று இரு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதும், தேர்தல் நடக்கக்கூடிய 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை. தேர்தல் நடைபெறாத ஒன்பது மாவட்டங்களில் மட்டுமே பொங்கல் பரிசு வழங்க அனுமதித்துள்ளதாகவும், தேர்தலின்போது வாக்களித்த வாக்குச்சீட்டுகளைப் போடுவதற்கு தனித்தனி பெட்டிகளை வைக்கக்கோரிய மனுவில் அடுத்த உள்ளாட்சித் தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தை அணுகக்கோரி வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க...SBI நகை மதிப்பீட்டாளருக்கான தொகை நிர்ணய அறிவிப்பிற்கு தடை!

Intro:தேர்தல் நடக்க கூடிய 27 மாவட்டங்களில் . பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை

9 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க அனுமதி.
Body:தேர்தல் நடக்க கூடிய 27 மாவட்டங்களில் . பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை

9 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க அனுமதி.

திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார்கோட்டையை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்,
அதில், "தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற டிசம்பர் 27 மற்றும் 30 ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற இருக்கிறது.
இதில் திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள நல்லமனார் கோட்டை ஊராட்சிமன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இச்சூழ்நிலையில் அ.தி.மு.க வினர் உள்ளாட்சிமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழக அரசின் சார்பாக
ரூ.1,000 ரொக்கமாகவும் அதனுடன் பொங்கல் பரிசுப் பொருட்களாக அரிசி , சக்கரை மற்றும் கரும்பு ஆகியவற்றை இலவசமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொடுப்பதற்காக திட்டமிட்டுள்ளனர் . இதில் , நாங்கள் கூறும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பேன் என்று உறுதி கூறினால் தான் நாங்கள் உங்களுக்கு இலவச பொருட்கள் பெறுவதற்கு டோக்கன் கொடுப்போம் என்று கூறி வாக்கு சேகரித்து அவர்களிடம் உறுதிமொழி பெற்று வாக்குகளை பெற முயற்சி செய்து வருகின்றனர் . இதனால் ஜனநாயக முறைப்படி தேர்தலில் வாக்களிக்க முடியாமல் பணத்திற்கும் இலவச பொருட்களுக்கும் ஆசைப்பட்டு, அதிமுகவினர் கூறும் வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் வாக்களிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் . இது தேர்தல் நடைமுறை விதிகளுக்கும் மற்றும் தேர்தல் சட்டவிதிகளுக்கும் புறம்பானது.மேலும் உள்ளாட்சிமன்ற தேர்தலில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் , ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சிமன்றத் தலைவர் , ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தனித்தனி வண்ணங்களில் ஒட்டு சீட்டு வழங்கப்பட்டு வாக்களித்து அதனை ஒரே பெட்டியில் போடுகின்றனர். இதனால் வாக்காளர்கள் வாக்களிக்கும் போதும் மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போதும் குழப்பம் ஏற்படுவதுடன் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குச் சீட்டுகளை பிரிப்பதில் நேரமும் விரயமாகிறது.எனவே வாக்குச்சீட்டிற்கு தகுந்தவாறு வாக்குப்பெட்டிகளையும் தனித்தனியே தயார் செய்து வைத்தால் வாக்களிக்கும் போதும் மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போதும் எவ்வித குழப்பமும் ஏற்படாமல் இருக்கும்.இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.எனவே தமிழக அரசு வழங்கவுள்ள ரூ.1,000 ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்க இடைக்கால தடை விதித்தும், தேர்தலில் போது வாக்களித்த ஒட்டு சீட்டுகளை போடுவதற்கு தனி தனி பெட்டிகளை வைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள்
துறைசுவாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது

தேர்தல் நடக்க கூடிய 27 மாவட்டங்களில் . பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை

9 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க அனுமதி.

தேர்தலில் போது வாக்களித்த ஒட்டு சீட்டுகளை போடுவதற்கு தனி தனி பெட்டிகளை வைக்க கோரிய மனுவில் அடுத்த உள்ளாட்சி தேர்தலில் போது தேர்தல் ஆணையம் அணுக கோரி வழக்கை முடிந்து வைப்புConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.