ETV Bharat / state

ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசு அனுமதி - நீதிமன்றத்தில் தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 6:51 AM IST

Case against IPS Balveer Singh: ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது என அரசுத் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வாதிடப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

மதுரை: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் eன்பவர் தாக்கல் செய்த மனுவில், “அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பொய்யான வழக்குப் பதிவு செய்து, சட்ட விரோதக் காவலில் வைத்த காவல்துறை என்னை கடுமையாகத் தாக்கினர். அப்போது என்னுடைய 4 நான்கு பற்கள் உடைக்கப்பட்டன. இதில், நான் மட்டுமன்றி விசாரணைக் கைதிகள் சிலரது பற்களை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பிடுங்கி சித்ரவதை செய்தார்.

அதைத் தொடர்ந்து, என்னை காவலர்கள் சிறையில் அடைத்தனர். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இந்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறை குற்றப்பத்திரிகை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும்.

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மார்ச் 10 அன்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை எனக்கு வழங்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்டக் குழு விசாரணை அதிகாரியான அமுதா மற்றும் திருநெல்வேலி சார் ஆட்சியர் விசாரணை அறிக்கைகளை எனக்கு வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை பாதுகாத்து ஒப்படைக்க வேண்டும். அமுதா ஐஏஎஸ் அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்து 3 மாதங்கள் ஆகியும், அரசுத்தரப்பில் தற்போது வரை பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும்” என வாதிடப்பட்டது.

தொடர்ந்து அரசுத் தரப்பில், “ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அமுதா ஐஏஎஸ் அறிக்கையை மனுதாரருக்கு வழங்க கால அவகாசம் தேவைப்படுகிறது” என வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: டீல் பேசிய காவல் துறை.. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைக்கும் அமர் பிரசாத் ரெட்டி.. நீதிமன்ற வளாகத்தில் நடந்தது என்ன?

மதுரை: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் eன்பவர் தாக்கல் செய்த மனுவில், “அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பொய்யான வழக்குப் பதிவு செய்து, சட்ட விரோதக் காவலில் வைத்த காவல்துறை என்னை கடுமையாகத் தாக்கினர். அப்போது என்னுடைய 4 நான்கு பற்கள் உடைக்கப்பட்டன. இதில், நான் மட்டுமன்றி விசாரணைக் கைதிகள் சிலரது பற்களை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பிடுங்கி சித்ரவதை செய்தார்.

அதைத் தொடர்ந்து, என்னை காவலர்கள் சிறையில் அடைத்தனர். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இந்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறை குற்றப்பத்திரிகை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும்.

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மார்ச் 10 அன்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை எனக்கு வழங்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்டக் குழு விசாரணை அதிகாரியான அமுதா மற்றும் திருநெல்வேலி சார் ஆட்சியர் விசாரணை அறிக்கைகளை எனக்கு வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை பாதுகாத்து ஒப்படைக்க வேண்டும். அமுதா ஐஏஎஸ் அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்து 3 மாதங்கள் ஆகியும், அரசுத்தரப்பில் தற்போது வரை பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும்” என வாதிடப்பட்டது.

தொடர்ந்து அரசுத் தரப்பில், “ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அமுதா ஐஏஎஸ் அறிக்கையை மனுதாரருக்கு வழங்க கால அவகாசம் தேவைப்படுகிறது” என வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: டீல் பேசிய காவல் துறை.. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைக்கும் அமர் பிரசாத் ரெட்டி.. நீதிமன்ற வளாகத்தில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.