ETV Bharat / state

கல்வி வியாபாரிகளின் வருமானத்திற்காக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு!

author img

By

Published : May 18, 2020, 5:17 PM IST

மதுரை : கல்வி வியாபாரிகளின் வருமானத்திற்காக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது என்று தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில அமைப்பாளர் பேராசிரியர் முரளி குற்றஞ்சாட்டியுள்ளார்.

tenth grade general exam is held for the income of education traders
கல்வி வியாபாரிகளின் வருமானத்திற்காக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு!

இது தொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில அமைப்பாளர் பேராசிரியர் முரளி வெளியிட்டுள்ள காணொலியில், “கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் தீவிரமாக பரவிவரும் இந்த நேரத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தக்கூடாது என பல்வேறு தரப்பிலிருந்தும் வேண்டுகோள்விடப்பட்டும் தமிழ்நாடு அரசு விடாப்பிடியாக தேர்வு நடத்துவதில் உறுதியாக உள்ளது.


இதற்கிடையே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வுக்கு வருகின்ற ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அந்த உடைகள் வழங்கப்படுவது குறித்து அறிவிப்பு இல்லை. மேலும், தற்போது தேர்வு எழுதக்கூடிய மனநிலையில் மாணவ - மாணவியர் உள்ளனரா என்பது குறித்தெல்லாம் தமிழ்நாடு அரசுக்கு கவலையில்லை. உழைத்தால் தான் உணவு இல்லையென்றால் அன்றாட சாப்பாட்டுக்கே வழி இல்லாத பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் தமிழ்நாட்டில் தான் பெரும்பான்மையாக உள்ளனர். இந்த நேரத்தில் அவர்கள் தேர்வு எழுதுவதற்கு எப்படி தயாராக முடியும்?.

தமிழ்நாடு அரசுக்கு இந்த தேர்வை நடத்துவதில் அப்படி என்ன அக்கறை என்று பார்த்தால், இது ஜூன் மாதம் என்பதால் கல்வி வியாபாரிகளுக்கு அறுவடை செய்யக் கூடிய தருணம். ஆகையால், கல்வி வியாபாரிகளை கணக்கில் கொண்டு தான் தமிழ்நாடு அரசு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதில் இவ்வளவு மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறது.

கல்வி வியாபாரிகளின் வருமானத்திற்காக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு!


பெரும்பாலான கல்வியாளர்கள் அனைவரும் வேண்டுகோள் விடுத்த பிறகும் கூட அரசு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதில் வேகம் காட்டுவது ஏற்புடையது அல்ல. தமிழ்நாடு அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்த மாதம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசின் அறிவிப்பை தமிழ்நாடு முழுவதுமுள்ள கல்வியாளர்கள் கண்டித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : 'மே 31ஆம் தேதி வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு'

இது தொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில அமைப்பாளர் பேராசிரியர் முரளி வெளியிட்டுள்ள காணொலியில், “கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் தீவிரமாக பரவிவரும் இந்த நேரத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தக்கூடாது என பல்வேறு தரப்பிலிருந்தும் வேண்டுகோள்விடப்பட்டும் தமிழ்நாடு அரசு விடாப்பிடியாக தேர்வு நடத்துவதில் உறுதியாக உள்ளது.


இதற்கிடையே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வுக்கு வருகின்ற ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அந்த உடைகள் வழங்கப்படுவது குறித்து அறிவிப்பு இல்லை. மேலும், தற்போது தேர்வு எழுதக்கூடிய மனநிலையில் மாணவ - மாணவியர் உள்ளனரா என்பது குறித்தெல்லாம் தமிழ்நாடு அரசுக்கு கவலையில்லை. உழைத்தால் தான் உணவு இல்லையென்றால் அன்றாட சாப்பாட்டுக்கே வழி இல்லாத பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் தமிழ்நாட்டில் தான் பெரும்பான்மையாக உள்ளனர். இந்த நேரத்தில் அவர்கள் தேர்வு எழுதுவதற்கு எப்படி தயாராக முடியும்?.

தமிழ்நாடு அரசுக்கு இந்த தேர்வை நடத்துவதில் அப்படி என்ன அக்கறை என்று பார்த்தால், இது ஜூன் மாதம் என்பதால் கல்வி வியாபாரிகளுக்கு அறுவடை செய்யக் கூடிய தருணம். ஆகையால், கல்வி வியாபாரிகளை கணக்கில் கொண்டு தான் தமிழ்நாடு அரசு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதில் இவ்வளவு மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறது.

கல்வி வியாபாரிகளின் வருமானத்திற்காக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு!


பெரும்பாலான கல்வியாளர்கள் அனைவரும் வேண்டுகோள் விடுத்த பிறகும் கூட அரசு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதில் வேகம் காட்டுவது ஏற்புடையது அல்ல. தமிழ்நாடு அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்த மாதம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசின் அறிவிப்பை தமிழ்நாடு முழுவதுமுள்ள கல்வியாளர்கள் கண்டித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : 'மே 31ஆம் தேதி வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.