ETV Bharat / state

தெலங்கானா முதலமைச்சர் மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம்!

மதுரை: உலக பிரசித்திப் பெற்ற அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலுக்கு, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் குடும்பத்தோடு வந்து, சாமி தரிசனம் செய்தார்.

author img

By

Published : May 11, 2019, 8:12 AM IST

chandrasekhar rao


தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். இந்த பயணத்தின் போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்த அவர், நேற்று ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசாமி திருக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் மதுரை புறப்பட்டார்.

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்

மதுரை வந்தடைந்த அவர், அங்கு அமைந்துள்ள உலக புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தனது குடும்பத்தோடு வந்த அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் வருகையையொட்டி நான்கு மாசி வீதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு கார் மூலம் விமான நிலையம் சென்ற முதலமைச்சர், அங்கிருந்து விமானம் மூலம் தெலங்கானா புறப்பட்டார்.


தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். இந்த பயணத்தின் போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்த அவர், நேற்று ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசாமி திருக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் மதுரை புறப்பட்டார்.

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்

மதுரை வந்தடைந்த அவர், அங்கு அமைந்துள்ள உலக புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தனது குடும்பத்தோடு வந்த அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் வருகையையொட்டி நான்கு மாசி வீதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு கார் மூலம் விமான நிலையம் சென்ற முதலமைச்சர், அங்கிருந்து விமானம் மூலம் தெலங்கானா புறப்பட்டார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
10.05.2019

*மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்   சுவாமி தரிசனம்*

தெலங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் தமிழகத்தில் கடந்த இரு நாள்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்,

அதனை தொடர்ந்து இன்று காலை ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலுக்குச்சென்ற சந்திரசேகர்ராவ் அங்கு சுவாமி தரிசனம் மேற்கொண்டார்,

பிறகு கார் மூலமாக மதுரை புறப்பட்ட முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு மாலை 5 மணிக்கு வருகை தந்தார்,

அவருடன் மனைவி, மகன்கள் மற்றும் மகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் வந்திருந்தனர். கிழக்கு கோபுர வாயிலில் முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் குடும்பத்தினரை திருக்கோயில் நிர்வாகிகள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று அளித்தனர்,

அதனைத் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்த முதல்வர் கார் மூலம் விமான நிலையம் சென்று அங்கிருந்து விமான முலம் தெலுங்கானா சென்றார்,

முதல்வர் வருகையையொட்டி காவல்துறை பாதுகாப்பு கோவில் நான்கு மாசி வீதிகளில் பலப்படுத்தப்பட்டு இருந்தது.



Visual send in ftp
Visual name : TN_MDU_05_10_TELANGANA CM NEWS_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.