ETV Bharat / state

தடம்புரண்ட பொதிகை எக்ஸ்பிரஸ் இன்ஜின்... விபத்து குறித்து தெற்கு ரயில்வே விளக்கம்

author img

By

Published : Aug 31, 2022, 7:43 PM IST

மதுரை ரயில் நிலையம் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் இன்ஜின் தடம் புரண்டு விபத்து குறித்து மதுரைக்கோட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

தடம்புரண்ட பொதிகை எக்ஸ்பிரஸ் இன்ஜின்... விபத்து குறித்து தெற்கு ரயில்வே விளக்கம்
தடம்புரண்ட பொதிகை எக்ஸ்பிரஸ் இன்ஜின்... விபத்து குறித்து தெற்கு ரயில்வே விளக்கம்

சென்னை: செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை வரை மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு மதுரையில் டீசல் இன்ஜின் மாற்றப்படுவது வழக்கம். அதுபோல இன்று அதிகாலை இன்ஜின் மாற்றம்செய்யும் பணி நடைபெற்றது. பொதிகை எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து வழக்கமான நேரத்திற்கு புறப்பட்டுச்சென்றது.

இந்த ரயிலில் இருந்து கழற்றப்பட்ட மின்சார இன்ஜின் பின்புறமாக பார்சல் ஆபிஸ் அருகே நிறுத்த சென்றபோது 3 சக்கரங்கள் தடம் புரண்டதாகவும்; தடம் புரண்ட இன்ஜினை சரி செய்வதற்காக காலை 07.25 மணி முதல் 20 நிமிடங்களுக்கு மின் பாதையில் உள்ள மின்சாரம் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டது.

இன்ஜின் தடம் புரண்டதால் திண்டுக்கல் மார்க்கத்தில் செல்ல வேண்டிய ரயில்கள் சிறிது காலதாமதமாக புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை முதல் செகந்திராபாத் சிறப்பு ரயில் ஒரு மணி நேரமும், வைகை எக்ஸ்பிரஸ் 10 நிமிடங்களும், பழனி சிறப்பு ரயில் 9 நிமிடங்களும், தேனி சிறப்பு ரயில் 32 நிமிடங்களும் மதுரையிலிருந்து கால தாமதமாக புறப்பட்டது.

தடம் புரண்ட ரயில் என்ஜின் காலை 07.35 மணிக்கு சரி செய்யப்பட்டது. இதனால் மதுரை ரயில் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க:சென்னை பல்கலைக்கழகத்தில் உடனடித் தேர்வு எழுத வாய்ப்பு

சென்னை: செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை வரை மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு மதுரையில் டீசல் இன்ஜின் மாற்றப்படுவது வழக்கம். அதுபோல இன்று அதிகாலை இன்ஜின் மாற்றம்செய்யும் பணி நடைபெற்றது. பொதிகை எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து வழக்கமான நேரத்திற்கு புறப்பட்டுச்சென்றது.

இந்த ரயிலில் இருந்து கழற்றப்பட்ட மின்சார இன்ஜின் பின்புறமாக பார்சல் ஆபிஸ் அருகே நிறுத்த சென்றபோது 3 சக்கரங்கள் தடம் புரண்டதாகவும்; தடம் புரண்ட இன்ஜினை சரி செய்வதற்காக காலை 07.25 மணி முதல் 20 நிமிடங்களுக்கு மின் பாதையில் உள்ள மின்சாரம் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டது.

இன்ஜின் தடம் புரண்டதால் திண்டுக்கல் மார்க்கத்தில் செல்ல வேண்டிய ரயில்கள் சிறிது காலதாமதமாக புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை முதல் செகந்திராபாத் சிறப்பு ரயில் ஒரு மணி நேரமும், வைகை எக்ஸ்பிரஸ் 10 நிமிடங்களும், பழனி சிறப்பு ரயில் 9 நிமிடங்களும், தேனி சிறப்பு ரயில் 32 நிமிடங்களும் மதுரையிலிருந்து கால தாமதமாக புறப்பட்டது.

தடம் புரண்ட ரயில் என்ஜின் காலை 07.35 மணிக்கு சரி செய்யப்பட்டது. இதனால் மதுரை ரயில் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க:சென்னை பல்கலைக்கழகத்தில் உடனடித் தேர்வு எழுத வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.