ETV Bharat / state

பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலைக்குறைக்கும் வகையில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரயில்வே

author img

By

Published : Sep 2, 2022, 10:34 PM IST

பண்டிகை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரயில்வே
பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரயில்வே

மதுரை: பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க, சில ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட இருக்கிறது. அதன்படி சென்னை எழும்பூர் முதல் குருவாயூர் ரயிலில் (16127) செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 11 வரையும்; குருவாயூர் முதல் சென்னை எழும்பூர் ரயிலில் (16128) செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 12 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

மேலும் தாம்பரம் முதல் நாகர்கோவில் அந்தியோதயா ரயிலில் (20691) செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 12 வரையும்; நாகர்கோவில் முதல் தாம்பரம் அந்தியோதயா ரயிலில் (20692) செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 12 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி இணைக்கப்படும்.

டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் முதல் நாகர்கோவில் ரயிலில் (12689) செப்டம்பர் 9 அன்றும் மற்றும் நாகர்கோவில் முதல் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயிலில் (12690) செப்டம்பர் 10 அன்றும் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படும்.

கோவை முதல் நாகர்கோவில் இரவு நேர ரயிலில் (22667) செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 10 வரையும் நாகர்கோவில் முதல் கோவை இரவு நேரம் ரயிலில் (22667) செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 11 வரையும்; ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:மின் விநியோகம் பாதிக்கப்படாமல் பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் - அமைச்சர் செந்தில் பாலாஜி

மதுரை: பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க, சில ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட இருக்கிறது. அதன்படி சென்னை எழும்பூர் முதல் குருவாயூர் ரயிலில் (16127) செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 11 வரையும்; குருவாயூர் முதல் சென்னை எழும்பூர் ரயிலில் (16128) செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 12 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

மேலும் தாம்பரம் முதல் நாகர்கோவில் அந்தியோதயா ரயிலில் (20691) செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 12 வரையும்; நாகர்கோவில் முதல் தாம்பரம் அந்தியோதயா ரயிலில் (20692) செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 12 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி இணைக்கப்படும்.

டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் முதல் நாகர்கோவில் ரயிலில் (12689) செப்டம்பர் 9 அன்றும் மற்றும் நாகர்கோவில் முதல் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயிலில் (12690) செப்டம்பர் 10 அன்றும் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படும்.

கோவை முதல் நாகர்கோவில் இரவு நேர ரயிலில் (22667) செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 10 வரையும் நாகர்கோவில் முதல் கோவை இரவு நேரம் ரயிலில் (22667) செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 11 வரையும்; ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:மின் விநியோகம் பாதிக்கப்படாமல் பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் - அமைச்சர் செந்தில் பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.