ETV Bharat / state

நவராத்திரி முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கம்

author img

By

Published : Sep 26, 2022, 9:22 PM IST

நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

நவராத்திரி முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கம்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
நவராத்திரி முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கம்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரை: நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அந்த வகையில் தாம்பரம் முதல் நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் (06001) புதன்கிழமை அன்று தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி மற்றும் அக்டோபர் 21 ஆம் தேதி ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில் முதல் தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06002) அக்டோபர் 5 ஆம் தேதி புதன்கிழமை அன்று நாகர்கோவிலிருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

நாகர்கோவில் முதல் தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06040) அக்டோபர் 25 ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று நாகர்கோவிலிருந்து மாலை 03.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

அக்டோபர் 25 ஆம் தேதி அன்று இயக்கப்பட இருக்கும் நாகர்கோவில் முதல் தாம்பரம் அதிவிரைவு ரயில் (06040) சாத்தூர் தவிர மற்ற ரயில் நிலையங்களில் இன்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 4 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தீபாவளி பட்டாசுகளுக்கு கட்டுப்பாடு? - தமிழக அரசு ஆலோசனை

மதுரை: நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அந்த வகையில் தாம்பரம் முதல் நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் (06001) புதன்கிழமை அன்று தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி மற்றும் அக்டோபர் 21 ஆம் தேதி ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில் முதல் தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06002) அக்டோபர் 5 ஆம் தேதி புதன்கிழமை அன்று நாகர்கோவிலிருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

நாகர்கோவில் முதல் தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06040) அக்டோபர் 25 ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று நாகர்கோவிலிருந்து மாலை 03.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

அக்டோபர் 25 ஆம் தேதி அன்று இயக்கப்பட இருக்கும் நாகர்கோவில் முதல் தாம்பரம் அதிவிரைவு ரயில் (06040) சாத்தூர் தவிர மற்ற ரயில் நிலையங்களில் இன்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 4 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தீபாவளி பட்டாசுகளுக்கு கட்டுப்பாடு? - தமிழக அரசு ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.