ETV Bharat / state

சித்திரைத் திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - காவல் துறை ஆணையர்

author img

By

Published : Apr 11, 2019, 8:24 AM IST

மதுரை: சித்திரைத் திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகர காவல் துறை ஆணையர் டேவிட்சன் தெரிவித்துள்ளார்.

காவல்துறை ஆணையர்

இது குறித்து அவர் கூறியதாவது: மதுரை சித்திரைத் திருவிழாவின் இறுதி நாட்களான ஏப்ரல் 17, 18, 19 ஆகிய மூன்று தினங்களில் பல லட்சம் பேர் கூடுவர். இதை கருத்தில்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 200 காவலர்களை கொண்ட 40 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து தேர் சுற்றி வரும் நான்கு மாசி வீதிகளிலும் 150 சுழலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கள்ளழகர் மதுரைக்குள் நுழையும் புதூர் முதல் வைகை ஆறு கரை வரை 200 கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் பகுதியான கோரிப்பாளையம், தேவர் சிலை, அழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடம் ஆகிய இடங்களில் பறக்கும் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். மேலும் விழாவின்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் கொள்ளையர்களின் புகைப்படங்களை அச்சிடப்பட்டு ஆங்காங்கே தகவல் பலகைகள் மூலம் ஒட்ட திட்டமிட்டுள்ளோம்.


மூன்று நாட்களும் 24 மணி நேரமும் செயல்படும், 50 இருசக்கர ரோந்து வாகனங்கள், சாதாரண உடையில் காவலர்கள் ரோந்து, மரத்தாலான தடுப்பு வேலிகள் உள்ளிட்டவைகளும் மேற்கொள்ளவுள்ளோம். மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது: மதுரை சித்திரைத் திருவிழாவின் இறுதி நாட்களான ஏப்ரல் 17, 18, 19 ஆகிய மூன்று தினங்களில் பல லட்சம் பேர் கூடுவர். இதை கருத்தில்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 200 காவலர்களை கொண்ட 40 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து தேர் சுற்றி வரும் நான்கு மாசி வீதிகளிலும் 150 சுழலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கள்ளழகர் மதுரைக்குள் நுழையும் புதூர் முதல் வைகை ஆறு கரை வரை 200 கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் பகுதியான கோரிப்பாளையம், தேவர் சிலை, அழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடம் ஆகிய இடங்களில் பறக்கும் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். மேலும் விழாவின்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் கொள்ளையர்களின் புகைப்படங்களை அச்சிடப்பட்டு ஆங்காங்கே தகவல் பலகைகள் மூலம் ஒட்ட திட்டமிட்டுள்ளோம்.


மூன்று நாட்களும் 24 மணி நேரமும் செயல்படும், 50 இருசக்கர ரோந்து வாகனங்கள், சாதாரண உடையில் காவலர்கள் ரோந்து, மரத்தாலான தடுப்பு வேலிகள் உள்ளிட்டவைகளும் மேற்கொள்ளவுள்ளோம். மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

*மதுரை சித்திரை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு - மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தகவல்*

மதுரை மாநகரில் சித்திரை திருவிழாவையொட்டி வருகின்ற ஏப்ரல் 17,18,19 என 3 நாட்களில் பல லட்சம் பேர் மதுரை மாநகரில் கூட இருப்பதால் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது,

* திருவிழாவில் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக 200 காவலர்களை கொண்ட 40 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது,

* தேர் சுற்றி வரும் 4 மாசி வீதிகளிலும் 150 சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்

* கள்ளழகர் மதுரைக்குள் நுழையும் புதூர் முதல் வைகை கரை வரை 200 கேமராக்கள் பொருத்த திட்டமிட்டுள்ளது,

* மக்கள் அதிகம் கூடும் தேரோட்ட பகுதி கோரிப்பாளையம் தேவர் சிலை அழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடம் ஆகிய இடங்களில் பறக்கும் கேமரா மூலம் மக்கள் அனைவரும் கண்காணிக்கப்படுவார்கள்,

* மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண் பெண் புகைப்படங்களை அச்சிடப்பட்டு அங்கங்கே வைக்க திட்டமிட்டுள்ளோம்,

* மூன்று நாட்களும் 24மணி நேரமும் செயல்படும் 50 இருசக்கர ரோந்து வாகனங்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்,

* இது மட்டுமில்லாமல் சாதாரண உடையில் இருபது குழுக்களாக காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்,

* தேர் திருவிழா அன்று மதுரை நாடாளுமன்ற தேர்தல் இருப்பதால் தேர் சுற்றிவரும் பாதையில் உள்ள 33 வாக்குச்சாவடிகளுக்கு மரத்தாலான தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு தனி பாதைகள் அமைக்கப்படும்,

* வாக்காளர்கள் வாக்குச்சாவடி செல்ல எந்த இடையூறும் இல்லாத வகையில் அனைத்து வகை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* பொதுமக்கள் அன்னதான வழங்கும் இடம் இலவசமாக பொருள் வழங்கும் இடங்களில் கவனமாக தனது உடமைகளை பாதுகாக்க வேண்டும் என *மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.*
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.