ETV Bharat / state

'எஸ்டிபிஐ கட்சியை அழித்து விடுவோம்' -  இந்து முன்னணி கட்சியினர் மிரட்டல்! - எஸ்டிபிஐ  கட்சியின் மாவட்ட அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம்

மதுரை : பாபர்மசூதி வழக்குத் தொடர்பாக போராடினால், எஸ்டிபிஐ கட்சியை அழித்துவிடுவோம் என இந்து முன்னணி கட்சியினர் மிரட்டல் கடிதம் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sdpi complaint cop
sdpi complaint cop
author img

By

Published : Dec 12, 2019, 9:59 PM IST

மதுரை மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில், பாபர் மசூதி இடிப்பு அனுசரிப்பு தினமான டிசம்பர் ஆறாம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில் பாபர் மசூதி தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டதால் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது எனவும், பாபர் மசூதி தொடர்பாக இனி சுவரொட்டிகள் ஒட்டினால் எஸ்டிபிஐ கட்சியை அழித்துவிடுவோம் எனவும் கூறி இந்து முன்னணி தெற்கு பகுதி தலைவர் பச்சை கனி, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் ஒன்றை தபால் மூலமாக அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து மிரட்டல் கடிதம் விடுத்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி, எஸ்டிபிஐ கட்சி மாவட்ட நிர்வாகிகள் இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

புகார் அளிக்க வந்த எஸ்டிபிஐ கட்சியினர்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட தலைவர் முஜிபூர் ரஹ்மான் பேசியபோது, 'ஜனநாயக ரீதியாகப் போராடினால் கட்சியை அழித்து விடுவோம் என மாவட்ட அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற செயல்களால் மதரீதியான மோதல்கள் உருவாகும் நிலை உள்ளது. எனவே, கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

நீதித்துறை நடுவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்.!

மதுரை மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில், பாபர் மசூதி இடிப்பு அனுசரிப்பு தினமான டிசம்பர் ஆறாம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில் பாபர் மசூதி தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டதால் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது எனவும், பாபர் மசூதி தொடர்பாக இனி சுவரொட்டிகள் ஒட்டினால் எஸ்டிபிஐ கட்சியை அழித்துவிடுவோம் எனவும் கூறி இந்து முன்னணி தெற்கு பகுதி தலைவர் பச்சை கனி, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் ஒன்றை தபால் மூலமாக அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து மிரட்டல் கடிதம் விடுத்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி, எஸ்டிபிஐ கட்சி மாவட்ட நிர்வாகிகள் இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

புகார் அளிக்க வந்த எஸ்டிபிஐ கட்சியினர்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட தலைவர் முஜிபூர் ரஹ்மான் பேசியபோது, 'ஜனநாயக ரீதியாகப் போராடினால் கட்சியை அழித்து விடுவோம் என மாவட்ட அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற செயல்களால் மதரீதியான மோதல்கள் உருவாகும் நிலை உள்ளது. எனவே, கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

நீதித்துறை நடுவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்.!

Intro:*பாபர்மசூதி வழக்கு தொடர்பாக போராடினால் எஸ்டிபிஐ கட்சியை அழித்துவிடுவோம் மாவட்ட அலுவலகத்திற்கு இந்து முண்ணனி கட்சியினர் மிரட்டல் கடிதம்.காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்*Body:பாபர்மசூதி வழக்கு தொடர்பாக போராடினால் எஸ்டிபிஐ கட்சியை அழித்துவிடுவோம் மாவட்ட அலுவலகத்திற்கு இந்து முண்ணனி கட்சியினர் மிரட்டல் கடிதம்.காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.

மதுரை மாவட்ட SDPI கட்சியின் சார்பில் பாபர் மசூதி இடிப்பு அனுசரிப்பு தினமான டிசம்பர் 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுருந்தன இந்நிலையில் பாபர் மசூதி தீர்ப்பை அனைவரும் ஏற்றுகொண்டதால் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தகூடாது எனவும், பாபர் மசூதி தொடர்பாக இனி சுவரொட்டிகள் ஒட்டினால் SDPI கட்சியை அழித்துவிடுவோம் என கூறி இந்து முண்ணனி தெற்கு பகுதி தலைவர் பச்சைகனி என்ற பெயரில் SDPI கட்சியின் மாவட்ட அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் ஒன்று தபால் மூலமாக வந்தது. இதனையடுத்து மிரட்டல் கடிதம் விடுத்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி SDPI கட்சி மாவட்ட நிர்வாகிகள் இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் பேசியபோது :

ஜனநாயக ரீதியாக போராடினால் கட்சியை அழித்துவிடுவோம் என மாவட்ட அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது போன்ற செயல்களால் மதரீதியான மோதல்களை உருவாக்கும் நிலை உள்ளதால் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தனர்.

பைட்-1 திரு.முஜிபுர் ரஹ்மான் - மாவட்ட தலைவர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.