ETV Bharat / state

TNPSC exam: 2016 குரூப் 4 தேர்வு முறைகேடு வெட்கக்கேடானது - நீதிபதிகள் வேதனை

author img

By

Published : Nov 10, 2021, 5:15 PM IST

2016ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு வெட்கக்கேடானது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

2016ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக மதுரையைச் சேர்ந்த முகமது ரக்வி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,"2016ஆம் தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 5,575 மையங்களில் 16 லட்சம் பேர் எழுதினர்.

இதன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களில் வெற்றிப்பெற்றது தெரியவந்தது.

தேர்வில் முறைகேடு என மனு

இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். இந்த குரூப் 4 முறைகேட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளது. சிபிஐ விசாரித்தால் தான் முறைகேடு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டுவர முடியும்.

எனவே குரூப் 4 முறைகேட்டில் அனைத்து உண்மைகளையும் கண்டறியவும், நியாயமாக விசாரணை நடைபெறவும் சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில்,வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வரும் சூழலில், இதுவரை 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 98% விண்ணப்பதாரர்கள், 2 அரசு ஊழியர், 1 ஓட்டுனர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் கீழ்மட்ட ஊழியர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உயர் அலுவலர்கள் குறித்த விசாரணை நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், முறைகேடு நடந்ததாக கூறப்படும் கீழக்கரை, ராமேஸ்வரம் ஆகிய தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டதா? என கேள்வி எழுப்பினர்.அரசு தரப்பில் இல்லை என பதிலளிக்கப்பட்டது.

நீதிபதிகள் கடும் கண்டனம்

அதற்கு நீதிபதிகள், "தேர்தல்களின்போது ஒரு வாக்குச்சாவடியில் இதுபோல முறைகேடு நடந்ததாக பிரச்னை எழுந்தாலும், தேர்தல் ரத்து செய்யப்படும் சூழலில், இந்த தேர்வு மையங்களில் முறைகேடு நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டும் தேர்வு ரத்து செய்யப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பினர். டிஎன்பிஎஸ்சி தரப்பில், தேர்வு எழுதிய பின்னர் விடைத்தாள்களை கொண்டு சென்ற போது, வழியிலேயே இந்த முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், "ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்ப எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படுகையில், இந்த விடைத் தாள்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர். தொடக்கத்திலேயே இந்த முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. இவை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன. இது மிகவும் வெட்கக்கேடான நிகழ்வு.

பல லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய விடைத்தாள்களை கொண்டு செல்வதில் கவனம் இல்லையா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது மிகப் பெரும் மோசடி. டிஎன்பிஎஸ்சி மீது மக்கள் இழந்த நம்பிக்கையை சரிசெயும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதிகள் பொறுப்புக்களில் சரியான நபர்களை நியமிக்கும் போதே இது போன்ற தவறுகள் தவிர்க்கப்படும்" என குறிப்பிட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: நடிகர் சூர்யா மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

2016ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக மதுரையைச் சேர்ந்த முகமது ரக்வி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,"2016ஆம் தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 5,575 மையங்களில் 16 லட்சம் பேர் எழுதினர்.

இதன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களில் வெற்றிப்பெற்றது தெரியவந்தது.

தேர்வில் முறைகேடு என மனு

இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். இந்த குரூப் 4 முறைகேட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளது. சிபிஐ விசாரித்தால் தான் முறைகேடு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டுவர முடியும்.

எனவே குரூப் 4 முறைகேட்டில் அனைத்து உண்மைகளையும் கண்டறியவும், நியாயமாக விசாரணை நடைபெறவும் சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில்,வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வரும் சூழலில், இதுவரை 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 98% விண்ணப்பதாரர்கள், 2 அரசு ஊழியர், 1 ஓட்டுனர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் கீழ்மட்ட ஊழியர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உயர் அலுவலர்கள் குறித்த விசாரணை நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், முறைகேடு நடந்ததாக கூறப்படும் கீழக்கரை, ராமேஸ்வரம் ஆகிய தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டதா? என கேள்வி எழுப்பினர்.அரசு தரப்பில் இல்லை என பதிலளிக்கப்பட்டது.

நீதிபதிகள் கடும் கண்டனம்

அதற்கு நீதிபதிகள், "தேர்தல்களின்போது ஒரு வாக்குச்சாவடியில் இதுபோல முறைகேடு நடந்ததாக பிரச்னை எழுந்தாலும், தேர்தல் ரத்து செய்யப்படும் சூழலில், இந்த தேர்வு மையங்களில் முறைகேடு நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டும் தேர்வு ரத்து செய்யப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பினர். டிஎன்பிஎஸ்சி தரப்பில், தேர்வு எழுதிய பின்னர் விடைத்தாள்களை கொண்டு சென்ற போது, வழியிலேயே இந்த முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், "ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்ப எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படுகையில், இந்த விடைத் தாள்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர். தொடக்கத்திலேயே இந்த முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. இவை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன. இது மிகவும் வெட்கக்கேடான நிகழ்வு.

பல லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய விடைத்தாள்களை கொண்டு செல்வதில் கவனம் இல்லையா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது மிகப் பெரும் மோசடி. டிஎன்பிஎஸ்சி மீது மக்கள் இழந்த நம்பிக்கையை சரிசெயும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதிகள் பொறுப்புக்களில் சரியான நபர்களை நியமிக்கும் போதே இது போன்ற தவறுகள் தவிர்க்கப்படும்" என குறிப்பிட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: நடிகர் சூர்யா மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.