ETV Bharat / state

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

author img

By

Published : Nov 10, 2020, 2:44 PM IST

மதுரை: சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, காவல் துறையினருக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

hc
c

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இறப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று, இந்த மனு நீதிபதி சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் கொடுக்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக காவல் ஆய்வாளர் உள்ளார். குற்றவாளிகளை தாக்கியதில் முக்கிய பங்கு இருக்கிறது. இவர் காவல் ஆய்வாளராக இருப்பதால் ஜாமீன் கொடுத்தால் வழக்கின் விசாரணை பாதிக்கக்கூடும் எனக் கூறினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிஐயின் வாதம் ஏற்றுக்கொள்ளும்படி உள்ளதால், ஸ்ரீதர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது மட்டுமின்றி தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சில வழிகாட்டுதல்களையும் பின்பற்ற உத்தரவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் விசாரணை உயிரிழப்பு அதிகமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்.

காவல் நிலைய மரணம் என்பது மனித தன்மையற்ற செயலாகும். இது ஜனநாயகத்திற்கு எதிரானது, முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

புகார் அளிக்க காவல் நிலையம் வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.

காவல் நிலையம் வரும் புகார் மனுதாரர்களை மோசமாக நடத்துவது காரணம் இல்லாமல் நீண்ட நேரம் காத்திருக்க வைப்பது போன்ற செயல்கள் இருக்கக்கூடாது.

புகார் அளிக்க வரும் பொது மக்களின் உரிமைகள் குறித்து ஒவ்வொரு காவல் நிலையத்திலும் முன்பகுதியில் தகவல் பலகை வைக்க வேண்டும்.

இந்த தகவல் பலகையில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்க வேண்டும். அனைத்து காவல் நிலையங்களிலும் முக்கியமான பகுதிகள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
அது முறையாக செயல்படுகிறதா என்பதையும் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். இதில் விதிமுறைகளை மீறும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி அதனை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இறப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று, இந்த மனு நீதிபதி சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் கொடுக்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக காவல் ஆய்வாளர் உள்ளார். குற்றவாளிகளை தாக்கியதில் முக்கிய பங்கு இருக்கிறது. இவர் காவல் ஆய்வாளராக இருப்பதால் ஜாமீன் கொடுத்தால் வழக்கின் விசாரணை பாதிக்கக்கூடும் எனக் கூறினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிஐயின் வாதம் ஏற்றுக்கொள்ளும்படி உள்ளதால், ஸ்ரீதர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது மட்டுமின்றி தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சில வழிகாட்டுதல்களையும் பின்பற்ற உத்தரவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் விசாரணை உயிரிழப்பு அதிகமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்.

காவல் நிலைய மரணம் என்பது மனித தன்மையற்ற செயலாகும். இது ஜனநாயகத்திற்கு எதிரானது, முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

புகார் அளிக்க காவல் நிலையம் வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.

காவல் நிலையம் வரும் புகார் மனுதாரர்களை மோசமாக நடத்துவது காரணம் இல்லாமல் நீண்ட நேரம் காத்திருக்க வைப்பது போன்ற செயல்கள் இருக்கக்கூடாது.

புகார் அளிக்க வரும் பொது மக்களின் உரிமைகள் குறித்து ஒவ்வொரு காவல் நிலையத்திலும் முன்பகுதியில் தகவல் பலகை வைக்க வேண்டும்.

இந்த தகவல் பலகையில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்க வேண்டும். அனைத்து காவல் நிலையங்களிலும் முக்கியமான பகுதிகள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
அது முறையாக செயல்படுகிறதா என்பதையும் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். இதில் விதிமுறைகளை மீறும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி அதனை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.