ETV Bharat / state

''சல்லடம் அணிந்தோருக்கு சங்கடம் இல்லை... கள்ளழகர் வாராரு துயரங்கள் இல்லை...''

மதுரையில் சித்திரைத் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், கள்ளழகரை வரவேற்க சல்லடம் அணிந்த பக்தர்களின் சலங்கைச் சத்தமும், பீய்ச்சியடிக்கும் தண்ணீரும் மதுரை மண்ணை குளிரச் செய்யவிருக்கிறது. அதற்காக மதுரை புதுமண்டபத்தில் தயாராகும் வண்ண வண்ண சல்லடங்கள் குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு...

author img

By

Published : May 1, 2023, 7:52 PM IST

madurai
மதுரை
''சல்லடம் அணிந்தோருக்கு சங்கடம் இல்லை... கள்ளழகர் வாராரு துயரங்கள் இல்லை...''

மதுரை: மதுரையின் மிகப்பெருமை வாய்ந்த பண்பாட்டுத் திருவிழாவாகக் கருதப்படும் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து வருகின்ற மே 5ஆம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில், கள்ளழகரின் பக்தர்கள் அணியும் சல்லடம் தைக்கும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகேயுள்ள புதுமண்டபம் குன்னத்தூர் சத்திரத்தில் 80-க்கும் மேற்பட்ட தையல் கலைஞர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். சித்திரைத் திருவிழாவின் மைய நிகழ்வாகக் கருதப்படுவது அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் தான்.

இதனைக் காண்பதற்கு மதுரை மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புறங்களிலிருந்து மக்கள் சாரை சாரையாக வந்திருந்து வழிபட்டுச் செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக அழகரின் பக்தர்கள் 'சல்லடம்' என்ற பல வண்ண ஆடைகள் உடுத்தி, தண்ணீர் பீய்ச்சியடித்து அழகரை வரவேற்று மகிழ்வது இத்திருவிழாவின் முக்கிய அம்சமாகும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகேயுள்ள குன்னத்தூர் சத்திரத்தில் சல்லடம் ஆடை தயாரிப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள தையற்கலைஞர்களை ஈடிவி பாரத் ஊடகத்திற்காக சந்தித்தோம். தையல்கலைஞர் கண்ணன் கூறுகையில், “புதுமண்டபத்தில் தொழில் செய்து கொண்டிருந்த நாங்கள் தற்போது புதிதாகக் கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திரத்தில் எங்கள் தொழிலை மேற்கொண்டு வருகிறோம். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வில்தான் சல்லடம் தயாரிக்கும் வேலைகள் இங்கே நடைபெறும். அதற்கான அனைத்து விதமான ஆடைகளும் இங்கே தயார் செய்யப்படுகின்றன. இந்த சல்லடம் உடையை அணிந்து கொண்டுதான் கள்ளழகரின் பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இதுபோன்ற உடைகள் தமிழ்நாட்டில் வேறு எங்கும் கிடையாது. மேலும் 80-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்தத் தொழிலை நம்பியுள்ளனர். சித்திரைத் திருவிழாவிற்காக புதுமண்டபத்திலிருந்து 2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் உடைகள் தைக்கப்பட்டு விற்பனையாவது வழக்கம்” எனத் தெரிவித்தார்.

மற்றொரு தையல் கலைஞர் சரவணன் கூறுகையில், “அழகருக்கு விரதமிருந்து கள்ளழகரைக் காண வரும் பக்தர்களுக்கான ஆடைகள் அனைத்தும் இங்கேயே தயாராகிறது. அதுமட்டுமன்றி கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் அம்மனுக்கான ஆடைகள், துணை ஆடைகள் அனைத்தும் இங்கேயே கிடைக்கும். சலங்கை, தலைப்பின்னல் உட்பட தெய்வங்கள் தொடர்புடைய பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் புதுமண்டபம்தான் சரியான இடம்.

வெளியூர்களிலிருந்து மட்டுமன்றி, வெளிநாடுகளிலிருந்தும் வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். ஆன்மிக விழாக்கள் தொடர்பாக வேறெங்கும் கிடைக்காத பொருட்கள் அனைத்தும் இங்கே நிச்சயமாகக் கிடைக்கும். மிகத் தத்ரூபமாகச் செய்து கொடுக்கும் தையல் கலைஞர்கள் இங்கே உள்ளனர். சித்திரைத் திருவிழா ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்பிருந்தே இங்கு பணிகள் தொடங்கிவிடும்.

மேலும் பெண்கள், குழந்தைகளுக்குத் தேவையான பரதநாட்டிய உடைகளும் இங்கே கிடைக்கும். பொதுமக்களின் தேவைக்கேற்றார்போல வடிவமைத்துத் தருவோம். அதேபோன்று நாடகக் கலைஞர்களுக்கான உடைகளும் இங்கே உண்டு” என்றார்.

சிவகங்கை மாவட்டம், அரசகுளத்தைச் சேர்ந்த பாண்டி என்ற அழகர் பக்தர் கூறுகையில், “அழகருக்கு திரி எடுப்பதையும், தண்ணீர் பீய்ச்சுவதையும் மேற்கொண்டு வருகிறோம். எங்கள் குடும்பம் பாரம்பரியமாகவே அழகருக்கு நேர்த்திக்கடன் செய்து வருகிறது. இதற்குத் தேவையான உடைகளை மதுரை புதுமண்டபத்தில் தான் வாங்குகிறோம்.

எனக்கு பிறகு என் மகனும், தற்போது என் பேரன் நவநீதகிருஷ்ணனும் அழகருக்கு சேவை செய்கிறோம். தற்போது சல்லடம் வாங்குவதற்காக நாங்கள் இங்கு வந்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் விலையேறத்தான் செய்கிறது. கரோனா காலத்தில் மிக அதிகமான விலை இருந்தது. ஆனால், தற்போது சிறிது குறைந்துள்ளது” எனத் தெரிவித்தார். இந்த சல்லடம் குறைந்தபட்சம் ரூ.1500-யில் இருந்து விற்பனையாகிறது. மேலும், குழந்தைகளுக்கும் தயார் செய்து கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அழகர்மலை திருமாலிருஞ்சோலையிலிருந்து அழகர் கிளம்பும்நாள் தொடங்கி மீண்டும் மலையை அடைகின்ற நாள் வரை மதுரை மாவட்டம் முழுவதும் சல்லடம் அணிந்து, சலங்கை சத்தத்துடன் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் கள்ளழகரின் பக்தர்கள் தெருக்கள் எங்கும் வண்ணமயமாக சுற்றிக் கொண்டிருப்பதே சித்திரைத் திருவிழாவின் பேரழகுதான். அழகரைத் தரிசிக்க வரும் மக்கள் அனைவரும் சல்லடம் அணிந்த பக்தர்களையும் கடவுளாகவே வணங்கும் காட்சி மதுரைக்கே உரித்தானது.

இதையும் படிங்க: ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு: மானியத்தில் ட்ரோன் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

''சல்லடம் அணிந்தோருக்கு சங்கடம் இல்லை... கள்ளழகர் வாராரு துயரங்கள் இல்லை...''

மதுரை: மதுரையின் மிகப்பெருமை வாய்ந்த பண்பாட்டுத் திருவிழாவாகக் கருதப்படும் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து வருகின்ற மே 5ஆம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில், கள்ளழகரின் பக்தர்கள் அணியும் சல்லடம் தைக்கும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகேயுள்ள புதுமண்டபம் குன்னத்தூர் சத்திரத்தில் 80-க்கும் மேற்பட்ட தையல் கலைஞர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். சித்திரைத் திருவிழாவின் மைய நிகழ்வாகக் கருதப்படுவது அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் தான்.

இதனைக் காண்பதற்கு மதுரை மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புறங்களிலிருந்து மக்கள் சாரை சாரையாக வந்திருந்து வழிபட்டுச் செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக அழகரின் பக்தர்கள் 'சல்லடம்' என்ற பல வண்ண ஆடைகள் உடுத்தி, தண்ணீர் பீய்ச்சியடித்து அழகரை வரவேற்று மகிழ்வது இத்திருவிழாவின் முக்கிய அம்சமாகும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகேயுள்ள குன்னத்தூர் சத்திரத்தில் சல்லடம் ஆடை தயாரிப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள தையற்கலைஞர்களை ஈடிவி பாரத் ஊடகத்திற்காக சந்தித்தோம். தையல்கலைஞர் கண்ணன் கூறுகையில், “புதுமண்டபத்தில் தொழில் செய்து கொண்டிருந்த நாங்கள் தற்போது புதிதாகக் கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திரத்தில் எங்கள் தொழிலை மேற்கொண்டு வருகிறோம். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வில்தான் சல்லடம் தயாரிக்கும் வேலைகள் இங்கே நடைபெறும். அதற்கான அனைத்து விதமான ஆடைகளும் இங்கே தயார் செய்யப்படுகின்றன. இந்த சல்லடம் உடையை அணிந்து கொண்டுதான் கள்ளழகரின் பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இதுபோன்ற உடைகள் தமிழ்நாட்டில் வேறு எங்கும் கிடையாது. மேலும் 80-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்தத் தொழிலை நம்பியுள்ளனர். சித்திரைத் திருவிழாவிற்காக புதுமண்டபத்திலிருந்து 2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் உடைகள் தைக்கப்பட்டு விற்பனையாவது வழக்கம்” எனத் தெரிவித்தார்.

மற்றொரு தையல் கலைஞர் சரவணன் கூறுகையில், “அழகருக்கு விரதமிருந்து கள்ளழகரைக் காண வரும் பக்தர்களுக்கான ஆடைகள் அனைத்தும் இங்கேயே தயாராகிறது. அதுமட்டுமன்றி கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் அம்மனுக்கான ஆடைகள், துணை ஆடைகள் அனைத்தும் இங்கேயே கிடைக்கும். சலங்கை, தலைப்பின்னல் உட்பட தெய்வங்கள் தொடர்புடைய பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் புதுமண்டபம்தான் சரியான இடம்.

வெளியூர்களிலிருந்து மட்டுமன்றி, வெளிநாடுகளிலிருந்தும் வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். ஆன்மிக விழாக்கள் தொடர்பாக வேறெங்கும் கிடைக்காத பொருட்கள் அனைத்தும் இங்கே நிச்சயமாகக் கிடைக்கும். மிகத் தத்ரூபமாகச் செய்து கொடுக்கும் தையல் கலைஞர்கள் இங்கே உள்ளனர். சித்திரைத் திருவிழா ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்பிருந்தே இங்கு பணிகள் தொடங்கிவிடும்.

மேலும் பெண்கள், குழந்தைகளுக்குத் தேவையான பரதநாட்டிய உடைகளும் இங்கே கிடைக்கும். பொதுமக்களின் தேவைக்கேற்றார்போல வடிவமைத்துத் தருவோம். அதேபோன்று நாடகக் கலைஞர்களுக்கான உடைகளும் இங்கே உண்டு” என்றார்.

சிவகங்கை மாவட்டம், அரசகுளத்தைச் சேர்ந்த பாண்டி என்ற அழகர் பக்தர் கூறுகையில், “அழகருக்கு திரி எடுப்பதையும், தண்ணீர் பீய்ச்சுவதையும் மேற்கொண்டு வருகிறோம். எங்கள் குடும்பம் பாரம்பரியமாகவே அழகருக்கு நேர்த்திக்கடன் செய்து வருகிறது. இதற்குத் தேவையான உடைகளை மதுரை புதுமண்டபத்தில் தான் வாங்குகிறோம்.

எனக்கு பிறகு என் மகனும், தற்போது என் பேரன் நவநீதகிருஷ்ணனும் அழகருக்கு சேவை செய்கிறோம். தற்போது சல்லடம் வாங்குவதற்காக நாங்கள் இங்கு வந்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் விலையேறத்தான் செய்கிறது. கரோனா காலத்தில் மிக அதிகமான விலை இருந்தது. ஆனால், தற்போது சிறிது குறைந்துள்ளது” எனத் தெரிவித்தார். இந்த சல்லடம் குறைந்தபட்சம் ரூ.1500-யில் இருந்து விற்பனையாகிறது. மேலும், குழந்தைகளுக்கும் தயார் செய்து கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அழகர்மலை திருமாலிருஞ்சோலையிலிருந்து அழகர் கிளம்பும்நாள் தொடங்கி மீண்டும் மலையை அடைகின்ற நாள் வரை மதுரை மாவட்டம் முழுவதும் சல்லடம் அணிந்து, சலங்கை சத்தத்துடன் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் கள்ளழகரின் பக்தர்கள் தெருக்கள் எங்கும் வண்ணமயமாக சுற்றிக் கொண்டிருப்பதே சித்திரைத் திருவிழாவின் பேரழகுதான். அழகரைத் தரிசிக்க வரும் மக்கள் அனைவரும் சல்லடம் அணிந்த பக்தர்களையும் கடவுளாகவே வணங்கும் காட்சி மதுரைக்கே உரித்தானது.

இதையும் படிங்க: ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு: மானியத்தில் ட்ரோன் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.