ETV Bharat / state

காணாமல் போகும் மீனவர்கள் குறித்து அறிக்கை வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு - மத்திய, மாநில அரசுகள்

மதுரை: மீனவர்கள் காணாமல் போன வழக்கில் மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

high Court madurai bench
author img

By

Published : Jul 15, 2019, 3:22 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், " ராமநாதபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் பல மீனவர்கள் காணாமல் போகிறார்கள். அவர்களைக் கண்டுபிடிப்பதில் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுவரை சுமார் 581 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டும், ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியும், 3 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர்.

இதேபோல் கடந்த 4ஆம் தேதி எனது உறவினர்கள் நான்கு பேர் பாம்பன் கிராமத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர். இதுவரை கரை திரும்பவில்லை. காணாமல்போன மீனவர்களைத் தேடிய போது, 2 மீனவர்கள் உயிருக்குப் போராடி நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாப்பட்டினம் பகுதியில் கரை ஒதுங்கினர். மீதமுள்ள இருவரின் நிலைகுறித்து இதுவரை தெரியவில்லை.

மேலும் இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே காணாமல் போன இரண்டு மீனவர்களையும் கண்டுபிடிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி தலைமையிலான அமர்வு காணாமல் போகும் மீனவர்களின் தற்போதைய நிலைக்குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யக் கோரி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், " ராமநாதபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் பல மீனவர்கள் காணாமல் போகிறார்கள். அவர்களைக் கண்டுபிடிப்பதில் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுவரை சுமார் 581 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டும், ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியும், 3 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர்.

இதேபோல் கடந்த 4ஆம் தேதி எனது உறவினர்கள் நான்கு பேர் பாம்பன் கிராமத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர். இதுவரை கரை திரும்பவில்லை. காணாமல்போன மீனவர்களைத் தேடிய போது, 2 மீனவர்கள் உயிருக்குப் போராடி நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாப்பட்டினம் பகுதியில் கரை ஒதுங்கினர். மீதமுள்ள இருவரின் நிலைகுறித்து இதுவரை தெரியவில்லை.

மேலும் இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே காணாமல் போன இரண்டு மீனவர்களையும் கண்டுபிடிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி தலைமையிலான அமர்வு காணாமல் போகும் மீனவர்களின் தற்போதைய நிலைக்குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யக் கோரி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Intro:கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்கள் குறித்த வழக்கு - மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜூலை 4ல் கடலுக்குச் சென்று காணாமல் போன 2 மீனவர்களை கண்டுபிடிக்கக் கோரிய வழக்கில், தற்போதைய நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. Body:கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்கள் குறித்த வழக்கு - மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜூலை 4ல் கடலுக்குச் சென்று காணாமல் போன 2 மீனவர்களை கண்டுபிடிக்கக் கோரிய வழக்கில், தற்போதைய நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த ஆரோக்கியசாமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " ராமநாதபுரம் மற்றும் சுற்றியுள்ள மீனவ மாவட்டங்களில் பல மீனவர்கள் காணாமல் போகிறார்கள். அவர்களைக் கண்டு பிடிப்பதில் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுவரை சுமார் 581 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

1500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். சுமார் 3000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். கடந்த ஜூலை 4 ம் தேதி எனது உறவினர்கள் 4 பேர் பாம்பன் கிராமத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர்.இதுவரை கரை திரும்பவில்லை. காணாமல்போன மீனவர்களைத் தேடிய போது, 2 மீனவர்கள் உயிருக்குப் போராடி புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாப்பட்டினம் கடல் அருகே கரை சேர்ந்தது தெரிய வந்தது. காணாமல் போன மீதம் 2 மீனவர்களின் நிலை குறித்து இதுவரை தெரியவில்லை.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே காணாமல் போன 2 மீனவர்களைக் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு, இது குறித்த தற்போதைய நிலை அறிக்கையை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.