ETV Bharat / state

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்குப் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி!

author img

By

Published : May 26, 2022, 7:30 PM IST

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி
ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி

மதுரை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிறிய, பெரிய கோயில்களில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினர் அனுமதி மறுப்பதை எதிர்த்தும், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரியும் பல்வேறு மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதில், அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து ஆடல், பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

வெளியூரில் வேலை செய்யும் மக்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று ஒன்றுகூடி கொண்டாடுவது 'திருவிழா': இதனையடுத்து நீதிபதி, 'இரு சாதியினர் இடைேய? இரு தரப்பினர் இடையே பிரச்னைகள் இருந்தால் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்யலாம். ஆனால் அனைத்து தரப்பினரும் ஒன்று கூடுவது தவறு எனக்கூற முடியாது. இதனை இந்த நீதிமன்றம் ஏற்காது. திருவிழாக்கள் என்பது வெளியூரில் வேலை செய்யும் மக்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று ஒன்றுகூடி கொண்டாடுவது.

திருவிழாக்களின்போது ஒலிபெருக்கிகள் வைப்பதற்கு, மின் இணைப்பு வைப்பதற்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அனுமதி பெறுவது என்பது பாதுகாப்பை உறுதிபடுத்தவே. ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவில்லை எனப் பல்வேறு வழக்குகள் நீதிமன்றம் வந்துள்ளன. காவல் துறையினர் தங்களது வேலையை சரியாக செய்யவில்லை என்பதையே இது காட்டுகிறது.

திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை காவல் துறையினர் நடத்த முடியவில்லை என்றால் விலகிக் கொள்ளுங்கள். பிரச்னைகள் ஏற்படாமல் தடுப்பதற்கே காவல் துறையினர் உள்ளனர்’ எனக் கருத்து தெரிவித்த நீதிபதி பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தேனி - மதுரை ரயில் சேவை தொடக்கம்: சென்னைக்கும் ரயில்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிறிய, பெரிய கோயில்களில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினர் அனுமதி மறுப்பதை எதிர்த்தும், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரியும் பல்வேறு மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதில், அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து ஆடல், பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

வெளியூரில் வேலை செய்யும் மக்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று ஒன்றுகூடி கொண்டாடுவது 'திருவிழா': இதனையடுத்து நீதிபதி, 'இரு சாதியினர் இடைேய? இரு தரப்பினர் இடையே பிரச்னைகள் இருந்தால் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்யலாம். ஆனால் அனைத்து தரப்பினரும் ஒன்று கூடுவது தவறு எனக்கூற முடியாது. இதனை இந்த நீதிமன்றம் ஏற்காது. திருவிழாக்கள் என்பது வெளியூரில் வேலை செய்யும் மக்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று ஒன்றுகூடி கொண்டாடுவது.

திருவிழாக்களின்போது ஒலிபெருக்கிகள் வைப்பதற்கு, மின் இணைப்பு வைப்பதற்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அனுமதி பெறுவது என்பது பாதுகாப்பை உறுதிபடுத்தவே. ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவில்லை எனப் பல்வேறு வழக்குகள் நீதிமன்றம் வந்துள்ளன. காவல் துறையினர் தங்களது வேலையை சரியாக செய்யவில்லை என்பதையே இது காட்டுகிறது.

திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை காவல் துறையினர் நடத்த முடியவில்லை என்றால் விலகிக் கொள்ளுங்கள். பிரச்னைகள் ஏற்படாமல் தடுப்பதற்கே காவல் துறையினர் உள்ளனர்’ எனக் கருத்து தெரிவித்த நீதிபதி பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தேனி - மதுரை ரயில் சேவை தொடக்கம்: சென்னைக்கும் ரயில்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.