ETV Bharat / state

பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை தாக்கியதில் வீரர் உயிரிழப்பு

author img

By

Published : Jan 16, 2023, 2:12 PM IST

Updated : Jan 16, 2023, 2:23 PM IST

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கியிருந்த அரவிந்த் என்னும் மாடு பிடி வீரர் காளை தாக்கியதில் உயிரிழந்தார்.

பாலமேடு ஜல்லிக்கட்டு
பாலமேடு ஜல்லிக்கட்டு

மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இன்று (ஜனவரி 16) காலை 8 மணி அளவில் தொடங்கிய போட்டியில், ஐந்து சுற்றுகள் முடிந்துள்ளன. இதனிடையே பல மாடுபிடி வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், சுமார் 9 காளைகளை அடக்கி 3ஆம் இடத்தில் இருந்த அரவிந்த் ராஜன் என்னும் மாடுபிடி வீரர் காளை தாக்கியதில் பலத்த காயமடைந்தார். இவரை மருத்துவக்குழுவினர் மீட்டு முதலுதவி சிகித்தை அளித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அரவிந்த் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். அதேபோல திருச்சி சூரியூர் நடந்துவரும் ஐல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்த பார்வையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முதல்கட்ட தகவலில் அவர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் (25) என்பதும், மாடு முட்டியதில் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: நேபாள விமான விபத்தின் போது பேஸ்புக் நேரலையில் இருந்த 4 இந்தியர்கள்!!

மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இன்று (ஜனவரி 16) காலை 8 மணி அளவில் தொடங்கிய போட்டியில், ஐந்து சுற்றுகள் முடிந்துள்ளன. இதனிடையே பல மாடுபிடி வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், சுமார் 9 காளைகளை அடக்கி 3ஆம் இடத்தில் இருந்த அரவிந்த் ராஜன் என்னும் மாடுபிடி வீரர் காளை தாக்கியதில் பலத்த காயமடைந்தார். இவரை மருத்துவக்குழுவினர் மீட்டு முதலுதவி சிகித்தை அளித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அரவிந்த் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். அதேபோல திருச்சி சூரியூர் நடந்துவரும் ஐல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்த பார்வையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முதல்கட்ட தகவலில் அவர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் (25) என்பதும், மாடு முட்டியதில் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: நேபாள விமான விபத்தின் போது பேஸ்புக் நேரலையில் இருந்த 4 இந்தியர்கள்!!

Last Updated : Jan 16, 2023, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.