ETV Bharat / state

சாலையில் தறிகெட்டு ஓடியதால் நடைபாதையில் ஏறிய கார் - மூதாட்டி உயிரிழப்பு - Old women died in an car accident

மதுரை: கோரிப்பாளையம் அருகே சாலையில் தறிகெட்டு ஓடிய கார் நடைபாதையில் அமர்ந்திருந்த மூதாட்டி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

car Accident
car Accident
author img

By

Published : Dec 7, 2019, 7:55 AM IST

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி திருநாவுக்கரசு என்பவர், நேற்று கோரிப்பாளையம் அரசு மருத்துவமனை சாலையில் தனது காரில் சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவரது கார், அந்த சாலையில் தறிகெட்டு ஓடியுள்ளது.

பின்னர் அடுத்தடுத்து இரு சக்கர வாகனம், ஷேர் ஆட்டோ உள்ளிட்டவை மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. பின்னர் சாலை அருகே நடைபாதையில் அமர்ந்திருந்த மூதாட்டி மீது மோதிய அந்தக் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தல்லாகுளம் போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். உயிரிழந்த மூதாட்டியின் விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி திருநாவுக்கரசு என்பவர், நேற்று கோரிப்பாளையம் அரசு மருத்துவமனை சாலையில் தனது காரில் சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவரது கார், அந்த சாலையில் தறிகெட்டு ஓடியுள்ளது.

பின்னர் அடுத்தடுத்து இரு சக்கர வாகனம், ஷேர் ஆட்டோ உள்ளிட்டவை மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. பின்னர் சாலை அருகே நடைபாதையில் அமர்ந்திருந்த மூதாட்டி மீது மோதிய அந்தக் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தல்லாகுளம் போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். உயிரிழந்த மூதாட்டியின் விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

Intro:*மதுரையில் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மீது மோதி விபத்து ஒருவர் பலி இருவர் படு காயம்*Body:
*மதுரையில் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மீது மோதி விபத்து ஒருவர் பலி இருவர் படு காயம்*

மதுரை கோரிப்பாளையம் அரசு மருத்துவமனை சாலையில் நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி திருநாவுக்கரசு என்பவர் ஓட்டி வந்த கார் தறிகெட்டு சாலையில் ஓடியதால் அடுத்தடுத்து இரு சக்கர வாகனம் மற்றும் ஷேர்ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் சாலை அருகே நடைபாதையில் அமர்ந்திருந்த மூதாட்டி ஒருவர் மீது கார் மோதியதில் ரத்த வெள்ளத்தில் கிடந்தவர் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கார் மோதியதில் மேலும் இருவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர், சம்பவ இடத்தில் தல்லாகுளம் போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். உயிரிழந்த மூதாட்டியின் விவரங்கள் குறித்து போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.