ETV Bharat / state

திருமணசெலவிற்கான பணத்தில் ஏழை மக்களுக்கு உணவளித்த தம்பதியினர்!

author img

By

Published : May 26, 2020, 3:50 PM IST

மதுரை: எளிய முறையில் மணமுடித்த மணமக்கள் தங்கள் திருமண செலவிற்கு சேர்த்து வைத்திருந்த பணத்தை ஏழை மக்களின் உணவிற்கு வழங்கியுள்ளனர்.

food to poor peoples
Newly married couple providing food to poor peoples

கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உணவளிக்கும் விதமாக மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் கடந்த மே 1ஆம் தேதி முதல் 'மாமதுரை அன்னவாசல்' என்னும் திட்டத்தைத் தொடங்கினார்.

இதில் கடந்த 20 நாட்களாக தன்னார்வலராகப் பணிபுரிந்த வீரக்குமார் என்ற இளைஞனுக்கு சமயநல்லூரில் இன்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

ஊரடங்கு காரணத்தினால் திருமணம் எளிமையான முறையில் நடத்தப்பட்டதால், திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த பணத்தைக்கொண்டு 'மாமதுரை அன்னவாசல்' திட்டத்தின் மூலம் சுமார் 420 ஏழை - எளிய மக்களுக்கு உணவு வழங்கி மகிழ்ந்தனர்.

புதுமண தம்பதியினரின் இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய புதுமண தம்பதி!

கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உணவளிக்கும் விதமாக மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் கடந்த மே 1ஆம் தேதி முதல் 'மாமதுரை அன்னவாசல்' என்னும் திட்டத்தைத் தொடங்கினார்.

இதில் கடந்த 20 நாட்களாக தன்னார்வலராகப் பணிபுரிந்த வீரக்குமார் என்ற இளைஞனுக்கு சமயநல்லூரில் இன்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

ஊரடங்கு காரணத்தினால் திருமணம் எளிமையான முறையில் நடத்தப்பட்டதால், திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த பணத்தைக்கொண்டு 'மாமதுரை அன்னவாசல்' திட்டத்தின் மூலம் சுமார் 420 ஏழை - எளிய மக்களுக்கு உணவு வழங்கி மகிழ்ந்தனர்.

புதுமண தம்பதியினரின் இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய புதுமண தம்பதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.